என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
கல்வித்துறை விளையாட்டு மைதானத்தை தனியாரிடமிருந்து மீட்க வேண்டும்
- அமைச்சர் நமச்சிவாயத்திடம் மனு
- இளைஞர் சமுதாயத்தை போதை பழக்கத்தில் இருந்து திசைதிருப்பி விளை யாட்டின் மீது ஆர்வத்தை கொண்டுவர வேண்டும்.
புதுச்சேரி:
புதுவை பாகூர் தொகுதியில் பள்ளி கல்வித்துறைக்கு சொந்த மான விளையாட்டு மைதானம் உள்ளது. இந்த விளையாட்டு மைதானம் தனியார் வசம் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த மைதானத்தை மீட்க பாகூர் இளைஞர்கள், விளையாட்டு வீரர்கள், பொதுமக்கள் சார்பில் சுமார் 300 பேர் அடங்கிய மீட்பு போராட்டக்குழு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் தலைமையில், விளையாட்டு துறை அமைச்சர் நமச்சிவாயத்தை சந்தித்து மனு அளித்தனர்.அந்த மனுவில் கூறியிருப்ப தாவது:-
அரசுக்கு சொந்தமான விளையாட்டு திடலை மீட்டு விளையாட்டு வீரர்கள், பொதுமக்களுக்கு அர்ப் பணிக்க வேண்டும். இளைஞர் சமுதாயத்தை போதை பழக்கத்தில் இருந்து திசைதிருப்பி விளை யாட்டின் மீது ஆர்வத்தை கொண்டுவர வேண்டும்.
மாநில, தேசிய போட்டிகளில் பங்கேற்க வழி செய்ய வேண்டும். விளையாட்டுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். விளையாட்டு த்துறை மூலம் பயிற்சியா ளர்களிடம் சிறப்பு பயிற்சி பெற ஏற்பாடுகள் செய்ய வேண்டும். கிராமப்புற விளையாட்டு திடலில் சிறந்த போட்டிகளை நடத்த வேண்டும்.
இவ்வாறு மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்