search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    காதல் திருமணம் செய்த டிரைவர் மயங்கி விழுந்து சாவு
    X

    கோப்பு படம்.

    காதல் திருமணம் செய்த டிரைவர் மயங்கி விழுந்து சாவு

    • பாகூர் அருகே காதல் திருமணம் செய்த டிரைவர் மயங்கி விழுந்து இறந்து போனார்.
    • பாகூர் அருகே காதல் திருமணம் செய்த டிரைவர் மயங்கி விழுந்து இறந்து போனார்.

    புதுச்சேரி:

    பாகூர் அருகே காதல் திருமணம் செய்த டிரைவர் மயங்கி விழுந்து இறந்து போனார்.

    பாகூர் அருகே செலிமேடு பேட் புது தெருவை சேர்ந்தவர் ரவிசாஸ்திரி (வயது33). டிரைவர் வேலை செய்து வந்தார். இவரும் பெருங்களுரை சேர்ந்த புனிதா(28) என்பவரும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

    புனிதா கிருமாம்பாக்கத் தில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் லேப் டெக்னீசியனாக வேலை பார்த்து வருகிறார். நேற்று காலை ரவிசாஸ்திரி தனது மனைவி புனிதாவை பணிக்காக தனியார் மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விட்டு வீட்டில் துணி துவைத்துக்கொண்டி ருந்தார்.

    அப்போது திடீரென ரவிசாஸ்திரி மயங்கி விழுந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் ரவிசாஸ்திரியை மீட்டு பாகூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ரவிசாஸ்திரி வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    ரவிசாஸ்திரி கடந்த 5 ஆண்டுகளாக இருதய நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். இதன் காரணமாக அவர் இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

    இதுகுறித்து அவரது சகோதரர் பாலு கொடுத்த புகாரின் பேரில் பாகூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×