என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்.
டிரைவர் மயங்கி விழுந்து சாவு
- திருக்கனூர் அருகே டிரைவர் மயங்கி விழுந்து இறந்து போனார்.
- இந்தநிலையில் ஆனந்த் அங்குள்ள தண்ணீர்தொட்டி அருகே செல்போனில் பேசிக்கொண்டிருந்தார்.
புதுச்சேரி:
திருக்கனூர் அருகே டிரைவர் மயங்கி விழுந்து இறந்து போனார்.
திருக்கனூர் அருகே சந்தை புதுக்குப்பம் இந்திரா நகரை சேர்ந்தவர் ஆனந்த் (வயது35). டிரைவர் வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. ஆனந்த்துக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது.
இந்தநிலையில் ஆனந்த் அங்குள்ள தண்ணீர்தொட்டி அருகே செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென ஆனந்த் மயங்கி சாய்ந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு காரில் வானூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பல னின்றி ஆனந்த் பரிதாபமாக இறந்து போனார்.
இதுகுறித்து அவரது உறவினர் ராஜேந்திரன் கொடுத்த புகாரின் பேரில் காட்டேரிக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






