என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    குறைகேட்ட கென்னடி எம்.எல்.ஏ.
    X

    பொதுமக்களிடம் கென்னடி எம்.எல்.ஏ. குறைகளை கேட்டறிந்த காட்சி.

    குறைகேட்ட கென்னடி எம்.எல்.ஏ.

    • புதுவை உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட பிரான்சுவா தோப்பு பகுதிகளில் உப்பளம் தொகுதி அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. நேரடியாக மக்களை வீடு வீடாக சந்தித்து குறைகேட்பு நடத்தினார்.
    • அதற்கு 3 மாதம் அவகாசம் கேட்டுக்கொண்டார், தண்ணீர் இணைப்பு கொடுத்த பின் தண்ணீர் பிரச்சினை வராது என்று எம்.எல்.ஏ.விடம் உறுதி அளித்தார்.

    புதுச்சேரி:

    புதுவை உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட பிரான்சுவா தோப்பு பகுதிகளில் உப்பளம் தொகுதி அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. நேரடியாக மக்களை வீடு வீடாக சந்தித்து குறைகேட்பு நடத்தினார்.

    அப்போது அப்பகுதி பொதுமக்கள் எம்.எல்.ஏ.விடம் குடிநீர் பிரச்சினை, வாய்க்கால் பிரச்சினை, மின் வெட்டு பிரச்சினை, துப்புரவு பணி பிரச்சினை ஆகியவற்றினை தெரிவித்தனர்.

    உடனே பொதுப்பணித்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்ட எம்.எல்.ஏ. தண்ணீர் பிரச்சினை குறித்து செல்போனில் உதவிப் பொறியாளர் வாசனிடம் பேசினார். அம்பேத்கர் சாலையிலிருந்து புதிய தண்ணீர் இணைப்பு பொருத்திக் கொடுப்பதாக அதிகாரி கூறினார்.

    அதற்கு 3 மாதம் அவகாசம் கேட்டுக்கொண்டார், தண்ணீர் இணைப்பு கொடுத்த பின் தண்ணீர் பிரச்சினை வராது என்று எம்.எல்.ஏ.விடம் உறுதி அளித்தார்.

    மின்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்ட எம்.எல்.ஏ. மின்வெட்டு குறித்து பேசினார். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மின்துறை ஊழியர்கள் அங்குள்ள பழைய மின்கம்பிகளை அகற்றி புதிய கம்பிகளை விரைந்து மாற்றி கொடுத்தனர்.

    பின்பு மின்வெட்டு திருத்த வேலைகளை சம்பவ இடத்திலே மின்துறை ஊழியர்கள் சரி செய்து கொடுத்தனர். இனிமேல் அங்கு மின்வெட்டு பிரச்சினை வராது என்று உறுதி அளித்தனர்.

    வாய்க்கால் நீர் சரியாக செல்லவில்லை, குப்பைகளை சரிவர அகற்றுவதில்லை என்று எம்.எல்.ஏ.விடம் பொதுமக்கள் தெரிவித்ததால் நகராட்சி டாக்டர் துளசிராமனிடம் இது குறித்து தெரிவித்து விரைந்து துரித நடவடிக்கை எடுக்கும்படி எம்.எல்.ஏ. அறிவுறுத்தினார்.

    இதில் தி.மு.க. பிரமுகர்கள் நோயல், அஷ்ரப், கிளை செயலாளர் ஜெயசங்கர் மற்றும் காலப்பன், காந்தி,அசோக், அறிவழகன், பஸ்கல், அரவிந்த், சிரஞ்சீவி, ரகுமான்,மோரிஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×