என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்.
மாணவர் விடுதி கட்டுமான பணி விரைவில் தொடங்கும்
- மாணவர்கள் கூட்டமைப்பினரிடம் அமைச்சர் சந்திரபிரியங்கா உறுதி
- மாணவிகள் விடுதியில் உள்ள பிரச்சனை களை தீர்க்க வேண்டும் என வலியுறுத்தினார்.
புதுச்சேரி:
புதுவை யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பின் சார்பில் அமைப்பின் நிறுவனர் சுவாமிநாதன், மாநிலத் தலைவர் பிரவீன்பிர்லா, தமிழ்மணி, மனோஜ், முகேஷ் ஆகியோர் அமைச்சர் சந்திரபிரியங்காவை சந்தித்தனர்.
ஆதிதிராவிட நலத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் மாணவர் விடுதிகளில் தரமான உணவு, தாகூர் கலை கல்லூரியில் விடுதியை திறக்க வேண்டும் மகளிர் மாணவிகள் விடுதியில் உள்ள பிரச்சனை களை தீர்க்க வேண்டும் என வலியுறுத்தினார்.
இதனையடுத்து லாஸ்பேட்டை தாகூர் கலைக் கல்லூரி மாணவர் விடுதியை உடனடியாக கட்டி தருவது குறித்து அமைச்சர் சந்திரபிரியங்கா துறை செயலர் கேசவனை நேரில் அழைத்து விசாரித்தார்.
பின்னர், விடுதி கட்டுமான பணிக்கான கோப்புக்கு அனுமதி கிடைத்துள்ளதாகவும் விரை வில் மாணவர்களுக்கான விடுதி கட்டுமான பணி தொடங்கப்படும் என்று அமைச்சர் சந்திரபிரியங்கா உறுதி அளித்தார்
மேலும், விடுதி மாணவர்களின் உணவு மற்றும் அத்தியாவசிய தேவைகள் தொடர்பான பல்வேறு புதிய திட்டங்கள் கொண்டு வர உத்தேசித்துள்ளதாகவும் விரைவில் அவை அனை த்தும் நடைமுறைக்கு கொண்டு வரப்படும் என்றும் அமைச்சர் சந்திரபிரியங்கா உறுதி அளித்தார்.






