search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    மத்திய அரசின் 100 சதவீத நிதியால் தொகுதி வளர்ச்சி அடைந்து வருகிறது
    X

    கோப்பு படம்.

    மத்திய அரசின் 100 சதவீத நிதியால் தொகுதி வளர்ச்சி அடைந்து வருகிறது

    • பிரதமர் மோடிக்கு பா.ஜனதா பாராட்டு
    • மாநில அரசும், பா.ஜனதா அமைச்சர்களும் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

    புதுச்சேரி:

    அரியாங்குப்பம் தொகுதி பா.ஜனதா தலைவர் செல்வகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிரு ப்பதாவது:-

    புதுச்சேரி, அரியாங்குப்பம் தொகுதியில் வளர்ச்சி திட்டங்களை மேம்படுத்த மத்திய அரசின் நிதியுதவி அளிக்க வேண்டுமென மாநில அரசும், பா.ஜனதா அமைச்சர்களும் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தனர். அதன்படி மத்திய அரசின் 100 சதவீத நிதி பங்களிப்புடன் பல் வேறு திட்டங்கள் அரியாங்குப்பம் தொகுதியில் செயல் படுத்தப்பட்டு வருகிறது. வீராம்பட்டினம் பார்ப்பான் குளம் 3.16 லட்சம் ரூபாயிலும், காக்காய ந்தோப்பில் நீட்டு குளம் 3.57 லட்சம் ரூபாயிலும் ஆழப்படு த்தப்பட்டு உள்ள தால், நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து வருகிறது.

    மக்களுக்கும் தரமான குடிநீர் கிடைக்க வழி செய்யப் பட்டுள்ளது. அரியாங்குப்பம் மேற்கு அருந்ததிபுரம் சுடுகாடு வாய்க்கால் 2.18 லட்சம் ரூபாயில் துார்வா ரப்பட்டு உள்ளது.

    இது போல் பல்வேறு திட்டங்கள் மத்திய அரசின் 100 சதவீத நிதியுதவி யுடன் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால், அரியாங்குப்பம் தொகுதி வேகமாக வளர்ச்சி பெற்று வருகிறது. இதற்காக பிரதமர் மோடிக்கு, அரியாங்குப்பம் தொகுதி மக்கள் சார்பில் நன்றி தெரி வித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    Next Story
    ×