search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    4 முனை சந்திப்பில் குளம் போல் தேங்கி நிற்கும் வெள்ளம்
    X

    மதகடிப்பட்டு 4 முனை சந்திப்பில் குளம் போல் தேங்கி நிற்கும் மழை நீர்.

    4 முனை சந்திப்பில் குளம் போல் தேங்கி நிற்கும் வெள்ளம்

    • வேலைக்கு செல்லும் பெண்கள் தங்களது இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் கடும் அவதிக்குள்ளானார்கள்.
    • போக்குவரத்து செல்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    புதுச்சேரி:

    மதகடிப்பட்டு பகுதியில் விழுப்புரம்-நாகப்பட்டி னம் 4 வழி சாலைப்பணி நடைபெற்று வருகிறது.

    இச்சாலைக்காக சாலை யின் இரு புறங்களிலும் சர்வீஸ் சாலை அமைக்கப்ப ட்டுள்ளது. இந்த சர்வீஸ் சாலை முழுமை பெறாமல் இருப்பதால் ஆங்காங்கே பள்ளமாக உள்ளது.

    இதனால் நேற்று பெய்த மழையின் காரணமாக அந்த பள்ளத்தில் மழை நீர் குளம் போல் தேங்கி நிற்கின்றது. அவ்வழியாக பள்ளி மாணவ-மாணவிகள் கல்லூரி செல்லும் மாணவர்கள் வேலைக்கு செல்லும் பெண்கள் தங்களது இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் கடும் அவதிக்குள்ளா னார்கள்.

    மேலும் காலை நேரத்தில் அதிக அளவில் வாகன போக்குவரத்து இருப்பதால் பள்ளப்பகுதியில் தண்ணீர் சூழ்ந்து உள்ளதால் வாகனங்கள் பள்ளத்தில் விழுந்து விபத்தும் ஏற்படுகிறது.

    விபத்தினை தடுக்கும் வண்ணம் உடனடியாக நெடுஞ்சாலைத்துறை 2 பக்கங்களில் உள்ள சர்வீஸ் சாலையை சீரமைத்து சீரான போக்குவரத்து செல்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×