என் மலர்
புதுச்சேரி

மேட்டுப்பாளையத்தில் பயங்கரம் வாலிபர் வெட்டிக்கொலை
- உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தார்.
- சுப்பிரமணியை கொலை செய்தவர்கள் யார்? என்ன காரணத்திற்காக கொலை செய்தார்கள் என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுச்சேரி:
புதுவை மேட்டுப்பாளையத்தில் வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.
புதுவை மேட்டுப்பாளையம் பள்ளிக்கூட தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 32). கட்டிட தொழிலாளி. இவருக்கு ரஞ்சிதா என்ற மனைவியும் 2 பெண் குழந்தைகளும் உள்ளனர்.
சுப்பிரமணிக்கும் அவரது மனைவி ரஞ்சிதாவுக்கும் அடிக்கடி குடும்பத்தகராறு இருந்து வந்தது.
அதுபோல் கடந்த 2 நாட்களுக்கு முன்பும் அவர்களுக்கு இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டது.
இதனால் ரஞ்சிதா கணவருடன் கோபித்துக் கொண்டு குழந்தைகளுடன் தனது அக்கா வீட்டுக்கு சென்று தங்கி இருந்தார்.
சுப்பிரமணி அங்குசென்று மனைவியை சமாதானப்படுத்தி குடும்பம் நடத்த வீட்டுக்கு வருமாறு அழைத்தார்.
ஆனால் ரஞ்சிதா வர மறுத்துவிட்டார். இதையடுத்து சுப்பிரமணி வீடு திரும்பி விட்டார். இந்த நிலையில் ரஞ்சிதா சமாதானமடைந்து இன்று காலை வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டில் கணவர் சுப்பிரமணி ரத்த வெள்ளத்தில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவரது கழுத்தில் வெட்டு காயங்கள் இருந்தது.
யாரோ சுப்பிரமணியை கத்தியால் வெட்டி படுகொலை செய்திருப்பது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து தகவல் அறிந்த மேட்டுப்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தார்.
மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சுப்பிரமணியை கொலை செய்தவர்கள் யார்? என்ன காரணத்திற்காக கொலை செய்தார்கள் என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வாலிபர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






