என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    தற்காலிக ஊழியர்கள் தர்ணா
    X

    உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட தற்காலிக ஊழியர்கள்.

    தற்காலிக ஊழியர்கள் தர்ணா

    • புதுவை குருமாம்பேட்டில் ராஜீவ் காந்தி அரசு கால்நடை மருத்துவக் கல்லூரியில் 12 ஆண்டுகளுக்கு மேலாக குறைந்த ஊதியத்தில் தற்காலிக ஊழியராக 79 பேர் பணியாற்றி வருகின்றனர்.
    • ஏற்கனவே முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவித்த குறைந்தபட்ச ஊதியம் ரூ.10 ஆயிரம் பல துறைகளில் பணியாற்றும் தற்காலிக ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

    புதுச்சேரி:

    புதுவை குருமாம்பேட்டில் ராஜீவ் காந்தி அரசு கால்நடை மருத்துவக் கல்லூரியில் 12 ஆண்டுகளுக்கு மேலாக குறைந்த ஊதியத்தில் தற்காலிக ஊழியராக 79 பேர் பணியாற்றி வருகின்றனர்.

    ஏற்கனவே முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவித்த குறைந்தபட்ச ஊதியம் ரூ.10 ஆயிரம் பல துறைகளில் பணியாற்றும் தற்காலிக ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் ராஜீவ் காந்தி கால்நடை அரசு மருத்துவக் கல்லூரியில் பணியாற்றும் தற்காலிக ஊழியர் பெண்கள் உள்ளிட்ட 79 பேருக்கு முதல்-அமைச்சர் அறிவித்த குறைந்தபட்ச ஊதியம் ரூ. 10 ஆயிரத்தை வழங்காமல் இழுத்தடிக்க செய்யும் கல்லூரி முதல்வர் செழியனை கண்டித்து தற்காலிக ஊழியர்கள் அரசு பணியாளர்கள் நல கூட்டமைப்பு தலைவர் சரவணன் தலைமையில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும் முதல்-அமைச்சர் அறிவித்ததை நிறைவேற்றாத கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து தொடர் முற்றுகை போராட்டம் அதிகாரிகளை சிறை பிடித்து போராட்டம் நடக்கும் என எச்சரிக்கை விடுத்தனர்.

    Next Story
    ×