என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை
    X

    கோப்பு படம்

    வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை

    • கரையாம்புத்தூர் அருகே பெற்றோர் திருமணம் செய்து வைக்காத ஏக்கத்தில் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • கரையாம்புத்தூர் அருகே கடுவனூர் விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் ரவி. டிரைவர் வேலை செய்து வருகிறார்.

    புதுச்சேரி:

    கரையாம்புத்தூர் அருகே பெற்றோர் திருமணம் செய்து வைக்காத ஏக்கத்தில் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    கரையாம்புத்தூர் அருகே கடுவனூர் விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் ரவி. டிரைவர் வேலை செய்து வருகிறார். இவரது மகன் ராம்குமார்(வயது26). ஐ.டி.ஐ. படித்த முடித்த இவர் திருவாண்டார்கோவிலில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். மது பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்ட ராம்குமார் தினமும் அளவுக்கு அதிகமாக மது குடித்து வந்தார். பெற்றோர் கண்டித்தும் மது பழக்கத்தை அவர் கைவிடவில்லை.

    குடியை மறக்க 2 முறை அவரை மறுவாழ்வு மையத்தில் அனுமதித்தும் மீண்டும், மீண்டும் ராம் குமார் மது குடித்து வந்தார்.

    இதற்கிடையே ராம்குமார் தனது பெற்றோரிடம் திருமணம் செய்து வைக்கும்படி வற்புறுத்தி வந்தார். அதற்கு மது பழக்கத்தை கைவிட்டால் திருமணம் செய்து வைப்ப தாக பெற்றோர் உறுதி அளித்தனர். ஆனாலும், ராம்குமார் இதனை ஏற்காமல் தொடர்ந்து மது குடித்து வந்தார்.

    இந்த நிலையில் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்த ராம்குமாரை அவரது தாயார் சாப்பிட அழைத்தார். அதற்கு பின்னர் சாப்பிடுவதாக கூறி விட்டு ராம்குமார் சோகமாக படுத்துக்கொண்டார்.

    நள்ளிரவு திடீரென சந்தேகமடைந்து அவரது தாயார் படுக்கை அறைக்கு சென்று பார்த்தார். அப்போது ராம்குமார் மின் விசிறியில் சேலையால் தூக்குபோட்டு தொங்குவதை கண்டு திடுக்கிட்டார். பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ராம்குமாரை தூக்கில் இருந்து மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே ராம்குமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து அவரது தந்தை ரவி கொடுத்த புகாரின் பேரில் காரையாம்புத்தூர் புறக்காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×