என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
    X

    கோப்பு படம்.

    வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

    • பெற்றோர் கண்டித்தால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • தினேஷ் மது குடித்து விட்டு பெற்றோரிடம் பிரச்சினை செய்தார்.

    புதுச்சேரி:

    கோரிமேட்டில் மது குடித்துவிட்டு வந்ததை பெற்றோர் கண்டித்தால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    புதுவை கோரிமேடு ஆனந்தாநகர் புகழேந்தி வீதியை சேர்ந்தவர் வைத்தியநாதன் தச்சுத்தொழிலாளி. இவரது மனைவி லட்சுமி.இவர் கதிர்காமம் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் ஊழியராக பணி புரிந்து வருகிறார்.

    இவர்களது மகன் தினேஷ் (வயது 29). பெயிண்டர் வேலை செய்து வந்த இவர் கடந்த சில நாட்களாக சரியாக வேலைக்கு செல்லாமல் மது குடித்து விட்டு பெற்றோரிடம் அடிக்கடி தகராறு செய்தார். அதுபோல் தினேஷ் மது குடித்து விட்டு பெற்றோரிடம் பிரச்சினை செய்தார். இதனை பெற்றோர் கண்டித்து சாப்பிட்டு தூங்குமாறு தினேஷிடம் கூறிவிட்டு அவர்கள் தூங்க சென்றனர்.

    இந்த நிலையில் தினேஷின் பெற்றோர் படுக்கை அறைக்கு சென்று பார்த்த போது அங்கு தினேஷ் மின் விசிறியில் சேலையால் தூக்கு போட்டு தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தினேஷை தூக்கில் இருந்து மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே தினேஷ் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து அவரது தந்தை வைத்தியநாதன் கொடுத்த புகாரின் பேரில் கோரிமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×