search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை
    X

    கோப்பு படம்.

    வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை

    • காதல் திருமணம் செய்த மனைவி கோபித்து சென்றதால் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • சரியாக வேலைக்கு செல்லாமல் அடிக்கடி மது குடித்து விட்டு மனைவியிடம் தகராறு செய்வது வழக்கம்.

    புதுச்சேரி:

    காதல் திருமணம் செய்த மனைவி கோபித்து சென்றதால் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    வாணரப்பேட்டை ராஜ ராஜன் வீதியை சேர்ந்தவர் தினேஷ்(வயது27). இவரது மனைவி சுந்தரபிரியா. இவர்கள் இருவரும் கடந்த 2017-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.

    திருமணம் செய்த பின்னர் தினேஷ் மது பழக்கத்தை ஏற்படுத்தி கொண்டதாக கூறப்படுகிறது. சரியாக வேலைக்கு செல்லாமல் அடிக்கடி மது குடித்து விட்டு மனைவியிடம் தகராறு செய்வது வழக்கம். அப்போதெல்லாம் கணவரிடம் கோபித்து கொண்டு சுந்தரபிரியா தாய் வீட்டுக்கு சென்று விடுவார்.

    பின்னர் சமாதான மடைந்து கணவர் வீட்டுக்கு வந்து விடுவார். அதுபோல் கடந்த 20 நாட்களுக்கு முன்பு தினேஷ் மது குடித்து விட்டு சுந்தரபிரியாவிடம் தகராறு செய்ததால் கணவரிடம் கோபித்துக்கொண்டு சுந்தரபிரியா தாய் வீட்டில் இருந்து வந்தார். தினேஷ் பலமுறை அழைத்தும் சுந்தரபிரியா குடும்பம் நடத்த வரவில்லை என கூறப்படுகிறது.

    சுந்தரபிரியாவுக்கு தினேஷ் போன் செய்தார். ஆனால் கணவர் பிரச்சினை செய்வார் என கருதி சுந்தரபிரியா போனை எடுத்து பேசவில்லை.

    இதனால் மனம் வருத்தமடைந்த தினேஷ் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். இவர் வீட்டில் தூக்குபோட்டு தொங்கினார். உடனே அவரது சகோதரர் மற்றும் அக்கம் பக்கத்தினர் தூக்கில் இருந்து தினேசை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே தினேஷ் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து அவரது மனைவி சுந்தரபிரியா கொடுத்த புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×