என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்
வாலிபரை தாக்கிய தொழிலாளி
- சாராயம் வாங்கி கொடுக்க மறுத்ததால் வாலிபரை மரக்கட்டையால் சரமாரியாக தாக்கிய தொழிலாளியை போலீசார் தேடி வருகிறார்கள்.
- இவருக்கு திருமணமாகி ராஜேஸ்வரி என்ற மனைவி உள்ளார்.
புதுச்சேரி:
சாராயம் வாங்கி கொடுக்க மறுத்ததால் வாலிபரை மரக்கட்டையால் சரமாரியாக தாக்கிய தொழிலாளியை போலீசார் தேடி வருகிறார்கள்.
புதுவை வேல்ராம்பட்டு முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் பெருமாள். இவரது 2-வது மகன் ஆனந்த் (வயது35). இவருக்கு திருமணமாகி ராஜேஸ்வரி என்ற மனைவி உள்ளார். ஆனந்துக்கு அதிகம் குடி பழக்கம் இருந்ததால் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவரது மனைவி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆனந்தை விட்டு பிரிந்து அவரது தாய் வீட்டுக்கு சென்று விட்டார். அதுமுதல் ஆனந்த் தொடர்ந்து மது குடித்து விட்டு தனது சகோதரர் கோபி மற்றும் உறவினர்களிடம் தகராறு செய்து வந்ததால் அவரிடம் யாரும் அதிகமாக பேசுவதில்லை.
இந்த நிலையில் கடந்த 2-ந் தேதி ஆனந்த் கொம்பாக்கம் சாராயக்கடையில் சாராயம் குடித்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கொம்பாக்கத்தை சேர்ந்த கூலி தொழிலாளி நாராயணன் என்பவர் ஆனந்திடம் சாராயம் வாங்கி கொடுக்குமாறு வலியுறுத்தினார். ஆனால் ஆனந்த் சாராயம் வாங்கி கொடுக்க மறுத்து விட்டார்.
பின்னர் ஆனந்த் அருகில் உள்ள பெட்ரோல் பங்க் எதிரே நின்றுக்கொண்டிருந்தார். அப்போது சாராயம் வாங்கி கொடுக்காததால் ஆத்திரமடைந்த நாராயணன் கீழே கிடந்த மரக்கட்டையை எடுத்து ஆனந்துவை சரமாரியாக தாக்கினார். மேலும் இனிமேல் என்கிட்ட வைத்துக்கொண்டால் உன்னை கொலை செய்யாமல் விடமாட்டேன் என்று மிரட்டி விட்டு சென்றார்.
இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்து ஆனந்த் ரத்த வெள்ளத்தில் கிடந்ததை அவ்வழியாக சென்றவர்கள் பார்த்து ஆனந்த்தின் சகோதரர் கோபிக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து கோபி சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஆனந்தை மீட்டு ஆட்டோவில் புதுவை அரசு ஆஸ்பத்தி ரியில் சிகிச்சைக்காக அனுமதித்தார். அங்கு ஆபத்தான நிலையில் ஆனந்த் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து ஆனந்தின் தாய் ராணி முதலியார்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






