search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற வாலிபர் கைது
    X

    கோப்பு படம்.

    கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற வாலிபர் கைது

    • வில்லியனூர் அருகே கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    • வில்லியனூர் அருகே சுல்லதான்பேட்டையில் தனியார் கல்லூரி உள்ளது.

    புதுச்சேரி:

    வில்லியனூர் அருகே கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    வில்லியனூர் அருகே சுல்லதான்பேட்டையில் தனியார் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரி அருகே மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு ஒரு கும்பல் கஞ்சா விற்பதாக வில்லியனூர் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் அப்பகுதியில் சாதாரண உடையில் நின்று கண்காணித்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்றுக்கொண்டிருந்த ஒரு வாலிபரை பிடித்து அவரது சட்டை பையில் சோதனை நடத்தினர். அப்போது அவரது சட்டை பையில் 5 கிராம் கொண்ட சிறுசிறு பொட்டலங்களாக கஞ்சா மறைத்து வைத்திருந்ததை போலீசார் கண்டனர். மொத்தம் 20 பாக்கெட் கஞ்சாவை அந்த வாலிபர் வைத்திருந்தார். இதைத்தொடர்ந்து போலீசார் அந்த வாலிபரிடமிருந்து கஞ்சாவை பறிமுதல் செய்து அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் வில்லியனூர் ஜி.என்.பாளையம் நடராஜன் நகரை சேர்ந்த சரண் என்ற சரண்ராஜ் (25) என்பது தெரியவந்தது. இதையடுத்து சரண்ராஜை போலீசார் கைது செய்தனர்.

    Next Story
    ×