என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
கஞ்சா விற்ற வாலிபர் கைது
- புதுவையில் கடந்த சில மாதங்களாக கஞ்சா விற்பனை அனைத்து பகுதிகளிலும் நடந்து வருகிறது.
- லாஸ்பேட்டையில் மாணவர்களுக்கு கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி:
லாஸ்பேட்டையில் மாணவர்களுக்கு கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
புதுவையில் கடந்த சில மாதங்களாக கஞ்சா விற்பனை அனைத்து பகுதிகளிலும் நடந்து வருகிறது. மாணவர்களை குறி வைத்து வியாபாரிகள் கஞ்சா விற்பனை செய்கி றார்கள். அவ்வப்போது போலீசார் கஞ்சா விற்பனை செய்பவர்களை கைது செய்தும் வருகிறார்கள்.
ஆனால் முற்றிலுமாக கஞ்சா விற்பனையை தடுக்க முடியவில்லை. கடந்த சில நாட்களுக்கு முன்பு பாகூர் அருகே கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற கடலூர் மாவட்டத்தை சேர்ந்த பட்டதாரி என்ஜினீயர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 6 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த நிலையில் லாஸ்பேட்டையில் பெத்தி செட்டிபேட் மைதானத்தில் மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக லாஸ்பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் திருமுருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கண்காணித்தனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமான நிலையில் நின்றுக்கொண்டி ருந்த ஒரு வாலிபர் சட்டை பையில் சோதனை நடத்தினர்.
சோதனையில் அவர் கஞ்சா பொட்டலங்களை மறைத்து வைத்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து போலீசார் அந்த வாலிபரிட மிருந்து கஞ்சாவை பறிமுதல் செய்து அவரிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் கருவடிக்குப்பம் மேஜர் சரவணன் நகரை சேர்ந்த சிவசக்தி என்ற கொக்கி சிவா என்பது தெரியவந்தது. இதையடுத்து சிவசக்தியை போலீசார் கைது செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்