என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
விஷபூச்சி கடித்ததில் ஆசிரியையின் கணவர் பலி
- நெட்டப்பாக்கம் அருகே நடந்த சோக சம்பவம்.
- ஜெயராமனுக்கு இன்சூலின் ஊசியை அவரது தம்பி சண்முகம் செலுத்துவது வழக்கம்.
புதுச்சேரி:
புதுவை நெட்டப்பாக்கம் அருகே மடுகரை சேடர் தெருவை சேர்ந்தவர் ஜெயராமன்(வயது56). இவரது மனைவி சிவகாமி. இவர் லாஸ்பேட்டை ஜெ.டி.எஸ். அரசு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விட்டு பிரிந்து மகன்களுடன் லாஸ்பேட்டை அரசு குடியிருப்பில் வசித்து வருகிறார்.
ஜெயராமன் பிளாஸ்டிக் பை வியாபாரம் செய்து கொண்டு தனது தம்பி சண்முகம் அரவணைப்பில் இருந்து வந்தார்.
ஜெயராமனுக்கு நீரழிவு நோய் இருந்து வந்தது. இதற்காக அவர் தினமும் இன்சூலின் ஊசியை பயன்படுத்தி வந்தார். ஜெயராமனுக்கு இன்சூலின் ஊசியை அவரது தம்பி சண்முகம் செலுத்துவது வழக்கம்.
அதுபோல் சண்முகம் இன்சூலின் ஊசியை செலுத்த ஜெய ராமனின் வீட்டுக்கு சென்றார்.
அப்போது ஜெயராமன் வாயில் நுரை தள்ளியப்படி கையில் ரத்தம் கசிந்தவாறு இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். ஜெயராமனை ஏதோ விஷப்பூச்சி கடித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவரது மூத்த மகன் சுகந்தன் கொடுத்த புகாரின் பேரில் மடுகரை புறக்காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்