search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    ஆசிரியர் தின விழா கொண்டாட்டம்
    X

    விழாவில் ஆசிரியர்-ஆசிரியைகளுக்கு பல்கலைக்கழகத் துணைவேந்தர் குருமீத்சிங் நினைவு பரிசு வழங்கிய காட்சி.

    ஆசிரியர் தின விழா கொண்டாட்டம்

    • பேட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது.
    • செஞ்சி வட்டம் சகாய மேரி தேவாலய பங்கு தந்தை பிரவின்குமார் தலைமை தாங்கி பேசினார்.

    புதுச்சேரி:

    பேட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. செஞ்சி வட்டம் சகாய மேரி தேவாலய

    பங்கு தந்தை பிரவின்குமார் தலைமை தாங்கி பேசினார். சிறப்பு அழைப்பாளராக புதுவை பல்கலைக்கழகத் துணைவேந்தர் குருமீத்சிங், அன்னை தெரசா சுகாதார அறிவியல் பட்ட மேற் படிப்பு ஆராய்ச்சி க ல்லூரி முதல்வர் கோபால் ஆகியோர் கலந்து கொண்டு, பள்ளியின் அனைத்து ஆசிரியர்களுக்கும் சால்வை அணிவித்து நினைவு பரிசுகள் வழங்கினர்.

    தொடர்ந்து தமிழாசிரியை ராசலட்சுமி சக்திவேல் எழுதிய மரபின் மழைத்துளிகள், நிகழ்வின் நிழல்கள் ஆகிய 2 நூல்கள் வெளியிடப்பட்டன. இந்நூலிற்கான தனித்தமிழ் பாவணர் விருது மற்றும் மர புப்பாமணி விருதுக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டு அவர் கவுரவிக்கப்பட்டார்.

    மேலும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற ஆசிரியர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. ஆசிரியர்கள் சார்பில் 2022-23-ம் கல்வியாண்டில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கான ஊக்கத்தொகையினைப்பள்ளி முதல்வரிடம் வழங்கினர். தொடர்ந்து மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது.

    நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர் பிரடெரிக், மருத்துவ இயக்குனர் ஜீத்தா பிரடெரிக், முதல்வர் அல்போன்ஸ் ஹில்டா , ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் சீத்தாராமன், முத்தானந்தம் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×