search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    மேற்படிப்பு படிக்க கணவர் எதிர்ப்பு- பெண் டாக்டர் தூக்கிட்டு தற்கொலை
    X

    மேற்படிப்பு படிக்க கணவர் எதிர்ப்பு- பெண் டாக்டர் தூக்கிட்டு தற்கொலை

    • பெண் பல் மருத்துவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    • விஜயசுந்தரிக்கு திருமணமாகி 3 ஆண்டுகளே ஆவதால் தாசில்தார் விசாரணையும் நடக்கிறது.

    புதுச்சேரி:

    புதுவை வில்லியனூர் மாதா கோவில் வீதியை சேர்ந்தவர் பாலமுருகன் என்ற கவுதமன். இவர் சேதராப்பட்டு பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக பணிபுரிந்து வருகிறார்.

    இவரது மனைவி விஜயசுந்தரி (28). திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு 2 1/2 வயதில் ஆண் குழந்தை உள்ளது. பல் டாக்டரான விஜயசுந்தரி புதுவையில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில், பல் மருத்துவ துறையில் பணியாற்றி வந்தார்.

    இந்நிலையில் விஜய சுந்தரிக்கு கோவையில் உள்ள மருத்துவக் கல்லூரியில் பல் மருத்துவ மேற்படிப்பு படிக்க சீட் கிடைத்தது. இதனை படிக்க விஜயசுந்தரி விரும்பினார். இது குறித்து கணவர் கவுதமனிடம் தெரிவித்தார்.

    ஆனால் விஜயசுந்தரி மேற்படிப்பு படிக்க கவுதமன் விரும்பவில்லை என கூறப்படுகிறது.

    இதனால் கணவன்-மனைவி இடையே பிரச்சனை ஏற்பட்டதாக தெரிகிறது.

    இதுகுறித்து நேற்று கவுதம் தனது மாமனார் ராமமூர்த்தியிடம் தெரிவித்துவிட்டு, வீட்டு ஹாலில் படுத்து தூங்கினார்.

    இந்த நிலையில் படுக்கை அறையில் இருந்த விஜயசுந்தரி தனது பெற்றோரிடம் கணவர் தன்னைப்பற்றி தவறாக கூறி கெட்டப்பெயர் ஏற்படுத்திவிட்டதாக நினைத்துக்கொண்டார்.

    இதனால் மனமுடைந்து விஜய சுந்தரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து வில்லியனுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    விஜயசுந்தரிக்கு திருமணமாகி 3 ஆண்டுகளே ஆவதால் தாசில்தார் விசாரணையும் நடக்கிறது. பெண் பல் மருத்துவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×