search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுச்சேரியில் கொலை செய்யப்பட்ட சிறுமி வளர்த்த நாய் சாப்பிடாமல் மெலிந்தது
    X

    புதுச்சேரியில் கொலை செய்யப்பட்ட சிறுமி வளர்த்த நாய் சாப்பிடாமல் மெலிந்தது

    • சிறுமி தினமும் நாய்க்கு நூடுல்ஸ் வைப்பது போல் ஓட்டலில் இருந்து நூடுல்ஸ் வாங்கி வந்து வைத்தும் ரோசி சாப்பிடவில்லை.
    • கடந்த 2-ந்தேதி முதல் எதை வைத்தாலும் சாப்பிடாமல் நாய் மிகவும் மெலிந்து விட்டது.

    புதுச்சேரி:

    புதுவை முத்தியால்பேட்டையில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமையால் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

    சிறுமி ஆசைப்பட்டதால் அவரின் தந்தை சிப்பிப்பாறை நாய் ஒன்றை வாங்கி கொடுத்துள்ளார்.

    அதற்கு 'ரோசி' என பெயரிட்டு வளர்த்து வந்த சிறுமி தினமும் நாய்க்கு உணவு வைத்து விட்டு தான் சாப்பிடுவாள்.

    மேலும் சிறுமிக்கு விருப்பமான நூடூல்சை நாய்க்கும் கொடுத்து பழகியுள்ளார். தினமும் இரவு நாய்க்கு சிறுமி நூடூல்ஸ் வைப்பார்.

    சிறுமி இறந்த 2-ந்தேதி முதல் வாய் இல்லாத ஜீவனான அந்த நாய் உணவு உட்கொள்ளாமல் சிறுமியின் வீட்டையே சுற்றி வருவதும் இரவில் அழுவதுமாக உள்ளது. சிறுமி தினமும் நாய்க்கு நூடுல்ஸ் வைப்பது போல் ஓட்டலில் இருந்து நூடுல்ஸ் வாங்கி வந்து வைத்தும் ரோசி சாப்பிடவில்லை.

    கடந்த 2-ந்தேதி முதல் எதை வைத்தாலும் சாப்பிடாமல் நாய் மிகவும் மெலிந்து விட்டது.

    சிறுமியை பிரிந்துள்ள நாய்க்கு ஆதரவாக இருக்கும் அந்த பகுதி இளைஞர்கள் யாரை பார்த்தாலும் குரைக்கும். இந்த நாய் கடந்த ஒரு வாரமாக சத்தமின்றி அமைதியாக இருப்பதாக தெரிவிக்கின்றனர்.

    இரவு நேரங்களில் நாய் அழுவது அப்பகுதி மக்களுக்கு மேலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×