என் மலர்
புதுச்சேரி

தொற்று பரவல் தீவிரமாகிறது- புதுவையில் 110 பேருக்கு கொரோனா
- புதுவையில் ஆயிரத்து 769 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.
- இதில் புதுவையில் 82, காரைக்காலில் 12, ஏனாமில் 16 பேர் என புதிதாக 110 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
புதுச்சேரி:
புதுவையில் கொரோனா தொற்று கடந்த சில நாட்களாக படிப்படியாக உயர்ந்து வந்தது.
இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 110 பேருக்கு தொற்று பரவியுள்ளதால் பொதுமக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது. புதுவையில் ஆயிரத்து 769 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் புதுவையில் 82, காரைக்காலில் 12, ஏனாமில் 16 பேர் என புதிதாக 110 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
புதுவையில் 10, ஏனாமில் 2, மாகியில் ஒருவர் என 13 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுவையில் 297, காரைக்காலில் 46, ஏனாமில் 40, மாகியில் 6 பேர் என 389 பேர் தொற்றுடன் வீட்டு தனிமையில் உள்ளனர். புதுவையில் 36, காரைக்காலில் 10, ஏனாமில் 4 பேர் என 50 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பினர்.
மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்து 962 ஆக உள்ளது. புதுவையில் 2-வது தவணை, பூஸ்டர் டோஸ் உட்பட 17 லட்சத்து 43 ஆயிரத்து 336 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர்.
இந்த தகவலை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கொரோனா நெறிமுறைகளை தொடரவும், அனைவரும் முக கவசம் அணியவும் சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.






