என் மலர்
புதுச்சேரி

ஐ.சி.ஐ. தலைவர் சுரேஷ், மாணவர்களுக்கு உறுப்பினர் சான்றிதழை வழங்கி பேசிய காட்சி.
மாணவர்களின் அத்தியாயம் தொடக்கம்
- புதுவை பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் சம்மந்தன் கட்டுமான முறைகள் மற்றும் செயல்படுத்துதல் பற்றி விரிவுரையற்றினார்.
- மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரியின் இயக்குனர் மற்றும் முதல்வர் வெங்கடாசலபதி வாழ்த்துரை வழங்கினார்.
புதுச்சேரி:
புதுவை மதகடிப்பட்டு மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரியில் கட்டிடவியல் துறை மாணவர்களுக்கான அத்தியாயம் இந்தியன் கான்கிரீட் இன்ஸ்டிட்யூட்டினால் நிறுவப்பட்டது.
நிகழ்ச்சியில் தக்ஷஷீலா பல்கலைக்கழகத்தின் வேந்தரும், மணக்குள விநாயகர் கல்வி அறக்கட்ட ளையின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குனருமான தனசேகரன் தலைமை தாங்கினார். செயலாளர் நாராயணசாமி கேசவன், பொருளாளர் ராஜராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரியின் இயக்குனர் மற்றும் முதல்வர் வெங்கடாசலபதி வாழ்த்துரை வழங்கினார்.
நிகழ்ச்சியின் மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரியின் பதிவாளர் அப்பாஸ் மொய்தீன், தேர்வு கட்டுப்பாட்டாளர் ஜெயக்குமார், அகாடமிக் டீன் அறிவழகர் ஆகியோர் வரவேற்புரையாற்றினார்.
ஐ.சி.ஐ. தலைவர் என்ஜினீயர் சுரேஷ், துணை த்தலைவர் முருகானந்தம், செயலாளர் அஜித்சந்திரன் மற்றும் புதுவை பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் சம்மந்தன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
ஐ.சி.ஐ. தலைவர் சுரேஷ், மாணவர்களுக்கு உறுப்பினர் சான்றிதழை வழங்கி பேசினார். அதனை தொடர்ந்து புதுவை பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் சம்மந்தன் கட்டுமான முறைகள் மற்றும் செயல்படுத்துதல் பற்றி விரிவுரையற்றினார்.
நிகழ்ச்சியில் கட்டிடவியல் துறை பேராசிரியர் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் கட்டிடவியல் துறைத்தலைவர் முனைவர் சுந்தரராமன் நன்றி கூறினார்.






