என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
ஆற்றங்கரையில் படித்துறை தேனீ.ஜெயக்குமார் ஆய்வு
- வில்லியனூர் அடுத்த திருக்காஞ்சியில், காசியிலும் வீசம் பெற்ற கெங்கை வராக நதீஸ்வரர் கோவில் உள்ளது.
- கோவிலில் முதல் முறையாக வருகிற 2023-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் மகா புஷ்கரணி விழா நடைபெற உள்ளது
புதுச்சேரி:
வில்லியனூர் அடுத்த திருக்காஞ்சியில், காசியிலும் வீசம் பெற்ற கெங்கை வராக நதீஸ்வரர் கோவில் உள்ளது.
கோவிலில் முதல் முறையாக வருகிற 2023-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் மகா புஷ்கரணி விழா நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை புதுவை இந்து சமய அறநிலையத்துறை செய்து வருகிறது.
விழா வில் லட்சக்கணக்கான பக் தர்கள் கூடுவர் என எதிர் பார்க்கப்படுகிறது.விழாவின் ஒரு பகுதி யாக வாரந்தோறும் சனிக்கிழமைகளில் சங்கராபரணி ஆற்றில் கங்கா ஆரத்தி விழா நடைபெற்று வருகிறது.
புஷ்கரணி விழாவிற்கு வரும் பக்தர்கள் புனித நீராடி செல்ல சங்கராபரணி ஆற்றில் திருக்காஞ்சி பகுதியில் படித்துறை அமைத்து தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் வந்து செல்வதற்காக கணுவாப்பேட்டை சாலையை, ஒதியம்பட்டு புதிய மேம்பால சாலையுடன் இணைப்ப தற்கான இடத்தையும், ஒதியம்பட்டு காசி விஸ்வநாதர் கோவில் அமைந்துள்ள சங் கராபரணி ஆற்றங்கரையில் படித்துறை அமைப்பதற் கான இடத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் வேளாண் துறை அமைச்சர் தேனீ. ஜெயக்குமார் ஆய்வு செய்தார்.
அப்போது, பொதுப் தலைமை பொறியாளர் சத்தியமூர்த்தி, செயற்பொறி யாளர் மண வாளன், உதவி பொறியா ளர் கோபி, அமைச்சரின் தனிச்செயலர் மனோகரன், காசிவிஸ்வநாதர் கோவில் அறங்காவல் குழு தலைவர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்