என் மலர்
புதுச்சேரி

காரைக்கால் மீனவர்கள் 16 பேரை கைது செய்த இலங்கை கடற்படை
- கோடியக்கரை தென்கிழக்கு கடலில் மீன்பிடித்தபோது இலங்கை கடற்படையினர் அங்கு வந்தனர்.
- மீனவர்கள் சென்ற படகும் பறிமுதல் செய்யப்பட்டது.
காரைக்கால்:
காரைக்கால் அருகே உள்ள கோட்டுச்சேரிமேடு பகுதியை சேர்ந்தவர் மீனவர் செல்வமணிக்கு சொந்தமான விசைப்படகில் மீனவர்கள் தினேஷ்குமார், சிவக்குமார், கிஷோர், ஜெகதாபட்டினத்தை சேர்ந்த அசோக், அழகர் உள்ளிட் 16 பேர் கடந்த 15-ந் தேதி மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் கோடியக்கரை தென்கிழக்கு கடலில் மீன்பிடித்தபோது இலங்கை கடற்படையினர் அங்கு வந்தனர்.
அவர்களை சுற்றி வளைத்த இலங்கை கடற்படையினர் எல்லைதாண்டி மீன்பிடித்ததாக கூறி 16 பேரையும் கைது செய்தனர். மீனவர்கள் சென்ற படகும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த தகவல் கோட்டுச்சேரி கிராம மீனவர்களுக்கு எட்டியது. அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனே காரைக்கால் மாவட்ட கலெக்டர், மீன்வளத்துறை அதிகாரியை சந்தித்து மனு கொடுத்தனர்.
அப்போது மீனவர்கள் மற்றும் படகை மீட்டுத்தருமாறு வலியுறுத்தியுள்ளனர்.
Next Story






