என் மலர்
புதுச்சேரி

காரைக்கால் ஸ்கூல் ஆப் அலைடு ஹெல்த் சயின்ஸ் சார்பில் பேச்சு, செவித்திறன் குறைபாடு மருத்துவ முகாம் நடந்த போது எடுத்த படம்.
பேச்சு, செவித்திறன் குறைபாடு மருத்துவ முகாம்
- பேச்சுமொழி நோயியல் துறை சார்பில் கதிருப்பு கிராமத்தில் மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.
- பயிற்சி முகாம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
புதுச்சேரி:
விநாயகாமிஷன் ரிசர்ச் பவுண்டேஷன் பல்கலை கழக துணைத்தலைவர் சந்திரசேகர், இயக்குனர் அருணா தேவி ஆலோசனை யின்படி காரைக்கால் விநாயகாமிஷன் மருத்துவ கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள ஸ்கூல் ஆப் அலைடு ஹெல்த் சயின்ஸ், ஒலியியல் மற்றும் பேச்சுமொழி நோயியல் துறை சார்பில் கதிருப்பு கிராமத்தில் மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.
பெற்றோர்களுக்கு பேச்சு மற்றும் செவித்திறன் குறைபாடு உள்ள குழந்தைகளை கண்டறிவது மற்றும் சிகிச்சை அளிப்பதற்கான பயிற்சி முகாம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
இந்த முகாமில் இணை பேராசிரியர் ரம்யா, உதவி பேராசிரியர் அருண்குமார், செவித்திறனியல் ஆர்த்தி ஆகியோர் பங்கேற்று காரைக்கால் பகுதி மற்றும் தமிழக கிராம பகுதிகளில் வந்த பேச்சு, செவித்திறன் குறைபாடு உள்ளவர்கள் சுமார் 100-க்கும் மேற்பட்ட வர்களுக்கு பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர்.