search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுவை கடற்கரை காந்தி திடலில் ரம்ஜான் சிறப்பு தொழுகை
    X

    ரம்ஜான் பண்டிகையையொட்டி புதுவை கடற்கரை சாலை காந்தி திடலில் இன்று காலை சிறப்பு தொழுகை நடந்தது. 

    புதுவை கடற்கரை காந்தி திடலில் ரம்ஜான் சிறப்பு தொழுகை

    • நூற்றுக்கணக்கான முஸ்லீம்கள் பங்கேற்று தொழுகை செய்தனர்.
    • முஸ்லிம்கள் தொழுகை செய்து, ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.

    புதுச்சேரி:

    நாடுமுழுவதும் ரம்ஜான் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது. ரம்ஜான் பண்டிகையை யொட்டி இன்று சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது. புதுவை கடற்கரை சாலை காந்தி திடலில் தவ்ஹீத் ஜமாத் அமைப்பு சார்பில் சிறப்பு தொழுகை நடந்தது. இதில் நூற்றுக்கணக்கான முஸ்லீம்கள் பங்கேற்று தொழுகை செய்தனர்.

    பின்னர் ஒருவரு க்கொருவர் கட்டித்தழுவி ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.

    இதுபோல் புதுவையில் உள்ள குத்பா பள்ளிவாசல், அகமதியா பள்ளிவாசல், மீரா பள்ளிவாசல், சுல்தா னியா பள்ளிவாசல் உள்ளிட்ட அனைத்து பள்ளி வாசல்களிலும் சிறப்பு தொழுகை நடந்தது. சுல்தான்பேட்டையில் உள்ள ஈத்கா பள்ளிவாசல் மைதானத்தில் முத்தவல்லி முகமது தலைமையில் சிறப்பு தொழுகை நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் தொழுகை செய்து, ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.

    Next Story
    ×