என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    சிறப்பு திட்டங்களை முதல்-அமைச்சர் ரங்கசாமி செய்து வருகிறார்-என்.ஆர்.இலக்கிய பேரவை பாராட்டு
    X

    கோப்பு படம்.

    சிறப்பு திட்டங்களை முதல்-அமைச்சர் ரங்கசாமி செய்து வருகிறார்-என்.ஆர்.இலக்கிய பேரவை பாராட்டு

    • 100 சதவீதம் சிறப்பாக இருக்க வேண்டும் என்று தான் செயல்திட்டம் வகுக்கப்படுகிறது. ஆனால் அதில் ஓரிரு குறைகள் இருக்கத்தான் செய்யும்.
    • முதல்-அமைச்சர் ரங்கசாமி மாநிலத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்ற ஒற்றை இலக்கத்தோடு அரசு அதிகாரிகளின் ஆலோசனை களை பெற்று அயராது பணியாற்றி வருகிறார்.

    புதுச்சேரி:

    என்.ஆர்.இலக்கிய பேரவை தலைவர் தனசேகரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கடற்கரையைத் தவிர எந்த கனிம வளமும் இல்லாத நம் புதுவைக்கு சுற்றுலா மட்டுமே அரசு நிர்வாகம் சுவாசிக்க ஆக்சிஜனாக இருக்கிறது. அதை மேம்படுத்தும் விதத்தில் ஒரு சில திட்டங்கள் செயல்படுத்த வேண்டிய கட்டாயம் அரசுக்கு உள்ளது. அது 100 சதவீதம் சிறப்பாக இருக்க வேண்டும் என்று தான் செயல்திட்டம் வகுக்கப்படுகிறது. ஆனால் அதில் ஓரிரு குறைகள் இருக்கத்தான் செய்யும்.

    அரசின் மொத்த பட்ஜெட்டில் 75 சதவீதம் நிதி அரசு ஊழியர்களுக்கு சம்பளத்துக்கே சரியாக இருக்கின்றது. மீதி நிதியை கொண்டு மக்கள் நல திட்டங்கள் புதிய அறிவிப்புகள் போன்றவைகளை செய்தாக வேண்டிய நிலையில் கூடுதல் நிதியை பெருக்க சில யுத்திகளை கையாள வேண்டியது அரசின் கடமை, நிர்வாக திறமையின் நிரந்தர அடையாளமாக திகழும் முதல்-அமைச்சர் ரங்கசாமி மாநிலத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்ற ஒற்றை இலக்கத்தோடு அரசு அதிகாரிகளின் ஆலோசனை களை பெற்று அயராது பணியாற்றி வருகிறார்.

    மாநிலம் பெருமை கொள்ளும் திட்டங்களை செயல்படுத்தி மக்களின் நன்மதிப்பை பெற்று வருபவர் முதல்-அமைச்சர் மாநில வளர்ச்சி, வருவாய் திட்டங்களை விமர்சிப்போரை என். ஆர். இலக்கியப் பேரவை வன்மையாக கண்டிக்கிறது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×