search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    நுகர்வேர் குறைதீர் ஆணையத்தில் சிறப்பு முகாம்
    X

    கோப்பு படம்.

    நுகர்வேர் குறைதீர் ஆணையத்தில் சிறப்பு முகாம்

    • நுகர்வோர் குறைதீர்வு ஆணையங்களில் தேங்கியுள்ள புகார்களை குறிப்பிடட்ட காலத்தில் தீர்வு காண முடிவு செய்யப்பட்டுள்ளது.
    • தீர்வு காண வேண்டும் என மத்தியஸ்த சமாதான் என்ற நாடு தழுவிய அமைப்பை மத்திய அரசு ஏற்படுத்தியுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை மாவட்ட நுகர்வோர் குறைதீர்வு ஆணைய பதிவாளர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தேசிய நுகர்வோர் குறைதீர்வு ஆணைய உத்தரவு மற்றும் வழிகாட்டுதலின்படி நுகர்வோர் புகார்களை காலநேரத்திற்குள் செயல் முனைப்போடு கையாளப்பட்டு தீர்வு காண வேண்டும் என மத்தியஸ்த சமாதான் என்ற நாடு தழுவிய அமைப்பை மத்திய அரசு ஏற்படுத்தியுள்ளது.

    இதன்படி நுகர்வோர் குறைதீர்வு ஆணையங்களில் தேங்கியுள்ள புகார்களை குறிப்பிடட்ட காலத்தில் தீர்வு காண முடிவு செய்யப்பட்டுள்ளது.

    புதுவை மாநில, மாவட்ட நுகர்வோர் குறைதீர்வு ஆணையங்களில் தேங்கியுள்ள புகார்களை பேச்சுவார்த்தையில் பேசி தீர்வு காண வருகிற 19-ந்தேதி சிறப்பு முகாம் நடக்கிறது.

    மாவட்ட நுகர்வோர் ஆணைய தலைவர் முத்துவேல் தலைமையில் உறுப்பினர்கள் கவிதா, ஆறுமுகம் ஆகியோர் முன்னிலையில் முகாமிற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×