என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    சபாநாயகர் ஏம்பலம் செல்வத்துக்கு   முதல்-அமைச்சர் ரங்கசாமி நேரில் வாழ்த்து
    X

    பிறந்த நாள் கொண்டாடிய சபாநாயகர் ஏம்பலம் செல்வத்துக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி நேரில் சென்று வாழ்த்து தெரிவித்த காட்சி.

    சபாநாயகர் ஏம்பலம் செல்வத்துக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி நேரில் வாழ்த்து

    • புதுவை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் 58-வது பிறந்த நாளை கொண்டாடினார்.
    • அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள் நேரில் சந்தித்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் 58-வது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு, பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, பாராளுமன்ற மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, பா.ஜனதா அகில இந்திய தலைவர் ஜே.பி.நட்டா, தேசிய அமைப்பு செயலாளர் சந்தோஷ், மத்திய இணைமந்திரிகள் ஜிதேந்திர பிரசாத்சிங், எல்.முருகன், புதுவை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் தொலை பேசி வாயிலாக பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.

    மேலும், முதல்-அமைச்சர் ரங்கசாமி, செல்வகணபதி எம்.பி, பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன், அ.தி.மு.க.கிழக்கு மாநில செயலாளரும், முன்னாள் சட்டமன்ற கட்சி தலைவருமான அன்பழகன், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சம்பத், செந்தில்குமார், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ஓம்சக்தி சேகர், தீப்பாய்ந்தான், ராஜாராமன், பா.ஜனதா மாநில செயலாளர் ரத்தினவேலு, மாநில விவசாய அணி பொறுப்பாளர் ராமு, மற்றும் அரசு செயலாளர்கள் அரசு உயரதிகாரிகள், ஏ.டி.ஜி.பி, போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள் நேரில் சந்தித்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர்.

    பிறந்த நாளையொட்டி ரெட்டியார் பாளையம், ராஜ்பவன், முத்தியா ல்பேட்டை, காலாப்பட்டு, அரியாங்குப்பம், உப்பளம் உள்ளிட்ட பல்வேறு தொகுதிகளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சிகளில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கினார்.

    சபாநாயகர் ஏம்பலம் செல்வம் பிறந்த நாளையொட்டி அவரது ஆத வரவாளர்கள் மணக்குள விநாயகர் கோவிலில் தங்கத் தேர் இழுத்தனர்.

    அவரது சொந்த தொகுதியான மணவெளியில் பல்வேறு இடங்களில் ஏற்பாடு செய்ய ப்பட்டிருந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    பின்னர் தவளகுப்பத்தில் உள்ள தனியார் திருமணமண்டபத்தில் ஏற்பாடு செய்யப்படிருந்த விழாவில் கலந்து கொண்டு தொண்டர்கள் மற்றும் பொதுமக்களின் வாழ்த்துக்களை பெற்றுக்கொண்டனர்.

    மேலும், 2 ஆயிரம் பேருக்கு மதிய விருந்து வழங்கப்பட்டது.

    Next Story
    ×