search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    தந்தைக்கு கொலை மிரட்டல் விடுத்த மகன்கள்
    X
    கோப்பு படம்

    தந்தைக்கு கொலை மிரட்டல் விடுத்த மகன்கள்

    • திருக்கனூர் அருகே தந்தையை தாக்கி கொலை மிரட்டல்
    • 2 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் வருகிறீர்கள் என கேட்டார்.

    புதுச்சேரி:

    திருக்கனூர் அருகே காட்டேரிக்குப்பம் அம்பேத்கர் வீதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. கூலி தொழிலாளி. இவருக்கு சங்கர், பாஸ்கர் மற்றும் பிரபு ஆகிய 3 மகன்கள் உள்ளனர்.

    இவர்களில் சங்கர், பாஸ்கர் ஆகியோர் தனது தந்தை சுப்பிரமணியிடமும் , தாயிடமும் பேசுவதில்லை என கூறப்படுகிறது.

    இந்த நிலையில் சங்கரும், பாஸ்கரும் ஒரே மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு வந்தனர். இதனை பார்த்த சுப்பிரமணி அவர்களை பார்த்து என்ன 2 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் வருகிறீர்கள் என கேட்டார்.

    அப்போது சங்கரும், பாஸ்கரும் சேர்ந்து தகாத வார்த்தைகளால் திட்டி சுப்பிரமணியை தாக்கினர். இதனால் வலி தாங்காமல் சுப்பிரமணி பக்கத்து வீட்டை சேர்ந்த சிங்காரம் என்பவரின் வீட்டில் தஞ்சம் புக முயன்றார்.

    அப்போது பாஸ்கர் மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த பட்டா கத்தியை எடுத்து வந்து சுப்பிரமணியை பார்த்து இரவோடு நீயும், உனது மனைவியும் வீட்டை காலி செய்து சென்று விடுங்கள். இல்லையென்றால் வெட்டி கொலை செய்து விடுவேன் என்று மிரட்டி விட்டு சங்கரும், பாஸ்கரும் அங்கிருந்து சென்று விட்டனர்.

    இந்த தகவல் அறிந்த இளைய மகன் பிரபு விரைந்து வந்து தாக்குதலில் காயமடைந்த சுப்பிரமணியை மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்து சிகிச்சை அளித்தார்.

    பின்னர் இதுகுறித்து சுப்பிரமணி காட்டேரிக்குப்பம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    காட்டேரிக்குப்பம் அருகே சந்தைபுதுக்குப்பம் முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் கண்ணன்(46). விவசாயி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த தமிழ் என்பவருக்கும் ஏற்கனவே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது.

    இந்த நிலையில் கண்ணன் தனது நண்பர் பாலமுருகனை பார்க்க அவரது வீட்டுக்கு சென்றார். அப்போது அங்கு வந்த தமிழ் ஏற்கனவே இருந்த முன் விரோதத்தை வைத்து கண்ணனை தகாத வார்த்தைகளால் திட்டி அங்கு கிடந்த தடியாலும், கல்லாலும் தாக்கினார்.

    மேலும் இதனை போலீசில் புகார் செய்தால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டினார்.

    இதுகுறித்து கண்ணன் காட்டேரிக்குப்பம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×