search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    தடுப்பூசியினால் தடுக்க கூடிய தொற்று நோய்க்கான கருத்தரங்கு
    X

     பிம்ஸ் மருத்துவ கல்லூரியில் கருத்தரங்கு நடைபெற்ற காட்சி.

    தடுப்பூசியினால் தடுக்க கூடிய தொற்று நோய்க்கான கருத்தரங்கு

    • பிம்ஸ் மருத்துவ மனையில், தடுப்பூசியினால் தடுக்க கூடிய தொற்று நோய்களின் கண்காணிப்பு பற்றிய கருத்தரங்கு நடைபெற்றது.
    • கருத்தரங்கில் தடுப்பூசியினால் தடுக்க கூடிய தொற்று நோய்களின் கண்காணிப்பு முறைகள் பற்றி விவாதிக்கப்பட்டது.

    புதுச்சேரி:

    பிம்ஸ் மருத்துவ மனையில், தடுப்பூசியினால் தடுக்க கூடிய தொற்று நோய்களின் கண்காணிப்பு பற்றிய கருத்தரங்கு நடைபெற்றது.

    இந்த கருத்தரங்கிற்கு உலக சுகாதார இயக்கத்தின் புதுவை கண்காணிப்பு மருத்துவ அதிகாரி டாக்டர் சாயிரா பானு கலந்து கொண்டு பேருரை ஆற்றினார். புதுவை மாநில சுகாதார துறையின் இைண இயக்குனர் தடுப்பூசி பிரிவு டாக்டர் ராஜாம்பாள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

    கல்லூரியின் இயக்குனர் அனில் ஜே.பூர்த்தி தலைமை வகித்தார். அறிவியல் கருத்தரங்கு துறையின் தலைவர் டாக்டர். சஜீவ் ஸ்லேட்டர் முன்னிலை வகித்தார்.

    இந்த கருத்தரங்கில் தடுப்பூசியினால் தடுக்க கூடிய தொற்று நோய்களின் கண்காணிப்பு முறைகள் பற்றி விவாதிக்கப்பட்டது. கருத்தரங்கில், போலியோ, தட்டம்மை, ஜெர்மன் தட்டம்மை, தொண்டை அடைப்பான் நோய், கக்குவான் இருமல், தசை விறைப்பு நோய்களை கண்காணிக்கும் முறைகள் பற்றி விளக்கப்பட்டது.

    இதில் உலகளாவிய தடுப்பூசி அட்டவணை மற்றும் அதில் மேம்படுத்தப்பட்டுள்ள சமீப சமுதாய மருத்துவ துறையின் தலைவர் டாக்டர் ராஜேஷ் குமார் கலந்து கொண்டு நன்றிரையாற்றினார்.

    Next Story
    ×