search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    மோட்டார் சைக்கிள் பெட்டியில் வைத்து சாராய பாக்கெட்டுகள் விற்பனை
    X

    கைப்பற்றபட்ட மோட்டார் சைக்கிள் பெட்டியில் சாராய பாக்கெட்டுகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ள காட்சி.

    மோட்டார் சைக்கிள் பெட்டியில் வைத்து சாராய பாக்கெட்டுகள் விற்பனை

    • புதுவை சேதராப்பட்டு பகுதியில் சாராய பாக்கெட்டுகளை வாங்கி வானூர், கிளியனூர் மற்றும் திண்டிவனம் பகுதிகளில் ஒரு சிலர் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • சப்-இன்ஸ்பெக்டர்கள் வேலுமணி மற்றும் பாலமுரளி போலீசார் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை சேதராப்பட்டு பகுதியில் சாராய பாக்கெட்டுகளை வாங்கி வானூர், கிளியனூர் மற்றும் திண்டிவனம் பகுதிகளில் ஒரு சிலர் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து வானூர் மற்றும் கிளியனூர் போலீசார் இரவு நேரங்களில் கண்காணித்து வந்தனர்.

    இந்நிலையில்கிளியனூர் போலீஸ் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கிளியனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் வேலுமணி மற்றும் பாலமுரளி போலீசார் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

    அப்போது தைலாபுரம் அருகே மோட்டார் சைக்கிள் பெட்டியில் வைத்து பாக்கெட் சாராயத்தை விற்பனை செய்தவரை போலீசார் பிடிக்க முயன்றனர்.ஆனால் அந்த நபர் வாகனத்தை அங்கேயே போட்டு விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    போலீசார் மோட்டார் சைக்கிளையும், சாராய பாக்கெட்டுகளையும் பறிமுதல் செய்து தப்பியோடிய நபரை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×