search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    தேசிய அளவிலான கூடோ போட்டிக்கு புதுவை வீரர்-வீராங்கனைகள் தேர்வு
    X

    தேசிய அளவில் நடைபெறும் கூடோ போட்டிக்கு தேர்வான புதுவை வீரர்-வீராங்கனைகள்.

    தேசிய அளவிலான கூடோ போட்டிக்கு புதுவை வீரர்-வீராங்கனைகள் தேர்வு

    • மாநிலத்தை சேர்ந்த ஏராளமான கூடோ தற்காப்பு கலை வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
    • குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் அடுத்த மாதம் நடைபெறும் தேசிய கூடோ தற்காப்பு கலை போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில கூடோ தற்காப்பு கலை சங்கத்தின் சார்பில் அடுத்த மாதம் குஜராத் மாநிலத்தில் நடைபெற உள்ள மத்திய அரசின் விளையாட்டு துறையால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய அளவிலான கூடோ போட்டிக்கு வீரர் மற்றும் வீராங்கனைகளை தேர்வு செய்யும் முகாம் பாலாஜி திரையரங்க வளாகத்தில் நடைபெற்றது.

    புதுவை மாநிலத்தை சேர்ந்த ஏராளமான கூடோ தற்காப்பு கலை வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

    இந்த நிகழ்ச்சிக்கு புதுவை மாநில கூடோ சங்கத் தலைவர் வளவன் தலைமை தாங்கினார், பொதுச் செயலாளர் சந்தோஷ் முன்னிலை வகித்தார் மேலும் பயிற்சியாளர்கள் ஆறுமுகம், அசோக், செந்தில், பாலச்சந்தர், செல்வம், மகேஷ், வெங்கடாஜலபதி, சுப்ரமணி உள்ளிட்டவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். தேசிய போட்டிக்கு புதுவை மாநிலத்தை சேர்ந்த 30 வீரர்கள், வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    இவர்கள் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் அடுத்த மாதம் நடைபெறும் தேசிய கூடோ தற்காப்பு கலை போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர்.

    முன்னதாக அனைவரையும் சங்கத் துணைத் தலைவர் கோவிந்தராஜ் வரவேற்றார்.

    Next Story
    ×