search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுவை கடற்கரையின் தெற்கு பகுதியில் கடல் அரிப்பு
    X

    கடல் அரிக்கப்பட்ட காட்சி.

    புதுவை கடற்கரையின் தெற்கு பகுதியில் கடல் அரிப்பு

    • மணலை தடுக்க தெற்கு பகுதியில் திட்டமிட்டப்படி பணிகள் நடக்கவேண்டும்.
    • புதுவை கடற்கரையில் தலைமைச்செயலகம் உள்ள வடக்கு கடற்கரை பகுதியில் பணிகள் முடிந்தாலும், தென்மேற்கு பகுதியில் திட்டமிட்டப்படி பணிகள் முடிக்கவில்லை.

    புதுச்சேரி:

    புதுவையில் தலைமை செயலகம் எதிரே கடற்கரையில் செயற்கை மணல் பரப்பு உருவாக்கும் பணி கடந்த 2017-ம் ஆண்டு மார்ச்சில் ரூ.20 கோடியில் தொடங்கப்பட்டது.

    கடலில் 200 மீட்டர் நீளத்துக்கு கற்கள் கொட்டப்பட்டன. அதையடுத்து மணல் பரப்பு இப்பகுதியில் உருவானது. 2017-ம் ஆண்டு ஆகஸ்ட்

    10-ம் தேதி கடற்கரையில் மணல் பரப்பு உருவாகும் வகையில் முக்கோண அமைப்பு உருவாக்கப் பட்டது. பெரிய இரும்பு தகடுகள் முக்கோணம் போல் வடிவமைக் கப்பட்டது.

    கடலில் பள்ளம் தோண்டி அதன் மீது கற்கள் கொட்டி இரும்பினால் உருவான முக்கோண அமைப்பு வைக்கப்பட்டது. இது கடலின் மட்டத்துக்கு இணையாக இருந்தது. இந்த முக்கோண அமைப்பு கடலின் சீற்றத்தை தடுத்து வலு குறைத்ததால் கரையில் மணல் குவிந்தது. இந்த பணி 2019-ல் முடிவடைந்தது.

    புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகள் இந்த மணல் பரப்பில் இறங்கி விளையாடி மகிழ்கின்றனர். இந்த மணல்பரப்பு கடல் சீற்றம் ஏற்பட்டால் மாயமாகும். புதுவை கடற்கரையில் தலைமைச்செயலகம் உள்ள வடக்கு கடற்கரை பகுதியில் பணிகள் முடிந்தாலும், தென்மேற்கு பகுதியில் திட்டமிட்டப்படி பணிகள் முடிக்கவில்லை.

    இதனால் தெற்கு பகுதியில் கடல் அரிப்பு ஏற்பட்டு வருகிறது. இப்பகுதி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் உள்ளது. இத்திட்டத்தில் பணிகள் நடந்தால்தான் கடல் அரிப்பு குறைந்து, மணல்பரப்பு உருவாகும்.

    இதுகுறித்து தேசியகடல் தொழில்நுட்ப இயக்குநர் ரமணமூர்த்தி கூறும்போது, வடகிழக்கு பருவமழையின் போது வடக்கிலிருந்து வரும் மணலை தடுக்க தெற்கு பகுதியில் திட்டமிட்டப்படி பணிகள் நடக்கவேண்டும். தலைமைச்செயலகம் அருகே மணல்பரப்பு உருவாக்கியதுபோல முக்கோணப்பரப்பு உருவாக்கி பணிகள் நடந்தால் துறைமுகத்துக்கு திரும்பும் மணலின் அளவு குறையும். கடற்கரையில் மணல்பரப்பு உருவாகும். இந்த திட்டம் நிறைவடைந்தால் அனைத்து பருவகாலங்களிலும் புதுவை கடற்கரையில் மணல்பரப்பு நீடித்து இருக்கும் என தெரிவித்தார்.

    இதையடுத்து ஸ்மார் சிட்டி திட்டத்தில் தெற்கு பகுதியில் மணல் பரப்பு உருவாக்க திட்டம் தயாரிக்கப்பட்டு, அதன் அறிக்கையை புதுவை அரசிடம் தேசிய கடலோர ஆராய்ச்சி மையம் சமர்பித்துள்ளது.

    இதற்கு ஒப்புதல் கிடைத்தவுடன் இத்திட்டம் செயல்பாட்டு பணிகள் தொடங்கப்பட உள்ளது.

    Next Story
    ×