என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
காலாப்பட்டு தொழிற்சாலையை திறக்கும் வரை தொழிலாளர்களுக்கு சம்பளம்
- முன்னாள் எம்.பி. ராமதாஸ் வலியுறுத்தல்
- புதுவை அரசின் தொழில் துறையும் சுற்றுப்புறச் சூழல் துறையும் தவறியுள்ளன.
புதுச்சேரி:
புதுவை முன்னாள் எம்.பி. பேராசிரியர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
காலாப்பட்டு மருந்து தொழிற்சாலையில் பாதுகாப்பு முறைகள் பின்பற்றப்படாமல் நிகழ்ந்த தீ விபத்து வன்மையாக கண்டிக்கத்தக்கது. உயிர்க்கொல்லி தொழிற்சாலையை மக்கள் அருகில் வாழும் இடத்தில் அமைக்க உத்தரவு கொடுத்த அரசுதான் இந்த விபத்துக்கு தார்மீக பொறுப்பேற்க வேண்டும்.
இங்கு பாதுகாப்பு முறைகளை உறுதிப்படுத்த புதுவை அரசின் தொழில் துறையும் சுற்றுப்புறச் சூழல் துறையும் தவறியுள்ளன.
ரசாயன தொழிற்சாலை கள் புதுவையின் சாபக்கேடுகளாக மாறி உள்ளன. இவற்றை தடுத்து மக்களின் முன்னேற்றத்தை பாதுகாக்க முதல்- அமைச்சருக்கும், தொழில்துறை அமைச்ச ருக்கும், அதிகாரிகளுக்கும் எந்த அக்கறையும் இல்லை என்பதை மக்கள் உணர வேண்டும்.
இந்திய அரசு நிர்ணயித்துள்ள அனைத்து பாதுகாப்பு முறைகளையும் செய்த பிறகு தான் தொழிற்சாலை திறப்பதற்கான உத்தரவை அளிக்க வேண்டும். தொழிற்சாலை திறக்கும் வரை அனைத்து தொழிலாளர்களுக்கும் சம்பளத்தை அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்