search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    சாலை புதுப்பிக்கும் பணி-சபாநாயகர் செல்வம் பணியை தொடங்கி வைத்தார்
    X

    சாலைபுதுப்பிக்கும் பணியை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தொடங்கி வைத்தார்.

    சாலை புதுப்பிக்கும் பணி-சபாநாயகர் செல்வம் பணியை தொடங்கி வைத்தார்

    • புதுவை அருகே அபிஷேகப்பாக்கம் செல்லும் சாலை சேதமாகி இருப்பதால் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்து வருகிறது.
    • புதிய தார் சாலை ரூ.46 லட்சம் செலவில் அமைப்பதற்கான பூமி பூஜை தொடங்கப்பட்டது.

    புதுச்சேரி:

    மணவெளி தொகுதி தவளக்குப்பத்தில் இருந்து அபிஷேகப்பாக்கம் செல்லும் சாலை சேதமாகி போக்குவரத்துக்கு இடையூறாக இருந்து வந்தது. இது சம்பந்தமாக பொதுமக்கள் அரசுக்கு தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து தொகுதி எம்.எல்.ஏ.வும் சபாநாயகருமான ஏம்பலம் செல்வம் நடவடிக்கை எடுத்து வந்தார்.

    தவளக்குப்பத்தில் இருந்து அபிஷேகபாக்கம் வழியாக தேடுவார் நத்தம் வரை புதிய தார் சாலை ரூ.46 லட்சம் செலவில் அமைப்பதற்கான பூமி பூஜை தொடங்கப்பட்டது.

    இந்த பணிகளை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தலைமை தாங்கி பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார். விழாவில் தலைமை பொறியாளர் சத்தியமூர்த்தி, செயற்பொறியாளர் சுந்தரராஜன், உதவி பொறியாளர் கோபி, இளநிலைப் பொறியாளர் நடராஜன், தொகுதி தலைவர் லக்ஷ்மிகாந்தன், சக்திபாலன், கிராம முக்கிய பிரமுகர்கள் ராமு, கிருஷ்ணமூர்த்தி, சக்திவேல், முன்னாள் கிராம பஞ்சாயத்து தலைவர் ராஜா மற்றும் ஞானசேகரன் உள்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×