search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    தன்னாட்சி அங்கீகாரம் பறிபோகும் அபாயம்
    X

    கோப்பு படம்.

    தன்னாட்சி அங்கீகாரம் பறிபோகும் அபாயம்

    • மாணவர் கூட்டமைப்பு கண்டனம்
    • மாணவிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை மாணவர்கள் கூட்டமைப்பு நிறுவனர் சுவாமிநாதன் வெளியி ட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுவை பாரதிதாசன் அரசு மகளிர் கலைக்கல்லூரி நிர்வாகக் கோளாறுகளால் சீரழிந்து வருகிறது. அரசின் கவனத்திற்கு பலமுறை நடக்கும் குளறுபடிகளை கொண்டு சென்றும் நடவடிக்கை இல்லை. இதனால் மாணவிகளின் எதிர்காலம் கேள்விக்கு றியாக உள்ளது.

    மாணவர் சேர்க்கை முடிந்து கல்லூரி துவங்கி 35 நாட்களில் செமஸ்டர் தேர்வு நடத்தியுள்ளனர். இதனால் மாணவிகளின் தேர்ச்சி விகிதம் குறைந்து ள்ளது. எப்போதும் 100 சதவீத தேர்ச்சியை பெறும் பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரி மாணவிகள் 50 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் ஒரு சில குறிப்பிட்ட பாடங்களில் தோல்வி அடைந்துள்ளனர்.

    இதற்கு கல்வித்துறையும் கல்லூரி நிர்வாகத்தின் அலட்சியமே காரணம். கல்லூரிக்கு வழங்கப்ப ட்டிருந்த தன்னாட்சி அங்கீகாரம் 2017 -ம் ஆண்டு முடிவடைந்தது. இதனை புதுப்பிக்க எந்த நடவடிக்கையும் எடுக்காதது கண்டனத்திற்குரியது.

    அரசு இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு கல்லூரி மற்றும் கல்லூரி மாணவிகளுக்கு எழுந்துள்ள பிரச் சனையை உடனடியாக தீர்த்து வைக்க வேண்டும். நடவடிக்கை எடுக்காவிட்டால் கல்லூரி மாணவிகளை ஒன்று திரட்டி அரசுக்கு எதிரான போராட்டம் நடத்தப்படும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×