என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்.
மிகவும் பின்தங்கிய வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு பின்பற்ற வேண்டும்
- பா.ம.க. அறிக்கை
- அதிகபட்சமாக பட்டியல் இனத்தவர் கலந்து கொள்ள இருக்கின்றார்கள் இவர்கள் ஏற்கனவே இட ஒதுக்கீட்டு அடிப்படையில் பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
புதுச்சேரி:
புதுச்சேரி மாநில பா.ம.க. மாநில அமைப்பாளர் கணபதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-
புதுவை மாநிலத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்க ளுக்கான பணி உயர்விலும் எம்.பி.சி. இட ஒதுக்கீடு பின்பற்ற வேண்டும். புதுவை மாநிலத்தில் நடக்க இருக்கின்ற காவல் துறைக்கான பதவி உயர்வு தேர்வில் சப்-இன்ஸ்பெக்டர் பதவிக்காக கலந்து கொள்கின்ற காவல்துறையில் பணி யாற்றும் தலைமை காவலர் மற்றும் உதவி சப்-இன்ஸ்பெக்டர் எந்த அடிப்படையில் தேர்வு செய்கிறார்கள்?
இதில் அதிகபட்சமாக பட்டியல் இனத்தவர் கலந்து கொள்ள இருக்கி ன்றார்கள் இவர்கள் ஏற்கனவே இட ஒதுக்கீட்டு அடிப்படை யில் பதவி உயர்வு பெற்று ள்ளனர்.
மற்ற மாநிலங்க ளில் இட ஒதுக்கீடு வேலை வாய்ப்பில் ஒரு முறை தான் பயன்படுத்த ப்படுகின்றது.
ஆனால் நமது புதுவை மாநிலத்தில் ஒவ்வொரு முறையும் பதவி உயர்வின் போது பட்டியல் இனத்தவர்க்கு மட்டும் இட ஒதுக்கீடு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது அவர்களின் உரிமை இதில் ஏதும் தவறு இல்லை ஆனால் இதனால் நீண்ட நாட்கள் பணிபுரியும் மிகவும் பின்தங்கிய சமுதாய பணியாளர்களின் இந்த வாய்ப்பு பறிக்கப்பட்டு மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.
மேலும் பணிக்கு வந்து சில ஆண்டுகளே ஆன ஊழியர்கள் மூத்த பணியாளர்களை விட பதவி உயர்வு பெற்று இட ஒதுக்கீடு அடிப்படையில் உயர் பதவி அடைகிறார்கள். ஆதலால் நமது புதுவை மாநிலத்தில் மிகவும் பின்தங்கிய வகுப்பினராக உள்ளவர்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள்.
பொருளாதார ரீதியாகவும் புதுவையில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பின் தங்கிய உள்ளனர்.மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ,பட்டியல் இனத்தவர் போன்றே பொருளாதார ரீதியில் சமமாகவே பின்தங்கிய உள்ளனர். என்பதை அரசு மேலான கவனத்தில் கொண்டு இந்த பணி உயர்விலும் எம் பி சி இட ஒதுக்கீடு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் .






