search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுவை- விழுப்புரம் ரெயில்களின் நேரத்தை மாற்ற கோரிக்கை
    X

    கோப்பு படம்.

    புதுவை- விழுப்புரம் ரெயில்களின் நேரத்தை மாற்ற கோரிக்கை

    • விழுப்புரத்திலிருந்து புதுவைக்கு மாலை 5.45 மணிக்கு பயணிகள் ரெயில் இயக்கப்படுகிறது.
    • ரெயில் சிறிது தாமதமானாலும் புதுவை ரெயிலை பயணிகள் தவறவிடுவர்.

    புதுச்சேரி:

    திருச்சி கோட்ட ரெயில்வே மேலாளர் அன்பழகனுக்கு புதுவை ரெயில் பயணிகள் சங்க தலைவர் சாமி, செயலாளர் மனோகரன், பொருளாளர் திருப்பதி ஆகியோர் அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

    புதுவை ரெயில் பயணிகள் மற்றும் மக்களின் வசதிக்காக ரெயில்களின் நேரத்தை மாற்றியமைக்க வேண்டும். சென்னை எழும்பூரில் இருந்து மதுரை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் விழுப்புரத்துக்கு மதியம் 3.50 மணிக்கு வருகிறது.

    புதுவையிலிருந்து 2.55 மணிக்கு திருப்பதி ரெயிலில் விழுப்புரம் செல்லும் பயணிகள் பல நேரங்களில் வைகை ரெயிலை தவறவிடுகின்றனர். எனவே திருப்பதி ரெயிலை 2.30 மணிக்கு இயக்க வேண்டும். விழுப்புரத்திலிருந்து புதுவைக்கு மாலை 5.45 மணிக்கு பயணிகள் ரெயில் இயக்கப்படுகிறது.

    குருவாயூரிலிருந்து சென்னை செல்லும் ரெயில் விழுப்புரத்துக்கு 5.40 மணிக்கு வருகறது. இந்த ரெயில் சிறிது தாமதமானாலும் புதுவை ரெயிலை பயணிகள் தவறவிடுவர்.

    எனவே புதுவை ரெயிலை 6.15 மணிக்கு இயக்க வேண்டும். விழுப்புரத்தில் 4, 5-வது நடைமேடைகளில் கோச் பொசிஷன் அறிவிப்பு பலகை அமைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

    Next Story
    ×