search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    சாலையில் தேங்கிய கழிவு நீர் அகற்றம்
    X

    கழிவு நீர் வாய்க்கால் சாலையில் நிரம்பி தேங்கி கிடந்த காட்சி.

    சாலையில் தேங்கிய கழிவு நீர் அகற்றம்

    • உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட புஸ்ஸி வீதியில் ப-வடிவ வாய்க்கால் அடைப்பு ஏற்பட்டு அதில் உள்ள கழிவு நீர் வாய்க்கால் சாலையில் நிரம்பி தேங்கி கிடந்தது.
    • நகராட்சி ஊழியர்கள் உதவியுடன் வாய்க்காலில் ஏற்பட்ட அடைப்புகளையும், தேங்கிய கழிவுநீரையும் விரைவாக அப்புறப்படுத்தினார்.

    புதுச்சேரி:

    உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட புஸ்ஸி வீதியில் ப-வடிவ வாய்க்கால் அடைப்பு ஏற்பட்டு அதில் உள்ள கழிவு நீர் வாய்க்கால் சாலையில் நிரம்பி தேங்கி கிடந்தது.

    இதை அறிந்த தி.மு.க. எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி பொதுப்பணிதுறை அதிகாரியிடம் தெரிவித்து அதனை விரைந்து சுத்திகரிப்பு செய்து கொடுக்கும்படி அறிவுறுத்தினார்.

    ஆனால் மார்ச் மாதம் வரை அவகாசம் கேட்டதால் உடனே நகராட்சி இயக்குனர் சிவக்குமார் மற்றும் டாக்டர் துளசிராமனிடம் செல்போனில் பேசி அங்குள்ள கழிவுநீரை சுத்திகரிப்பு செய்வதற்காக கழிவு நீரை உறிந்து எடுக்கும் நவீன எந்திரம் பொருத்திய லாரியை வரவைத்து நகராட்சி ஊழியர்கள் உதவியுடன் வாய்க்காலில் ஏற்பட்ட அடைப்புகளையும், தேங்கிய கழிவுநீரையும் விரைவாக அப்புறப்படுத்தினார்.

    மேலும் பொதுப் பணித்துறை அதிகாரிகளிடம் தொகுதிக்கு உட்பட்ட அனைத்து ப-வடிவ வாய்க்காலையும் தூர்வாரி சுத்திகரிப்பு செய்து கொடுக்கும்படி அறிவுறுத்தினார்.

    இதில் அவைத்தலைவர் ரவி, மாநில இளைஞர் அணி ராஜி, கிளை செயலாளர்கள் காளப்பன் மற்றும் ராகேஷ் கவுதமன், தி.மு.க.வை சேர்ந்த இருதயராஜ், ஈசாக், மரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×