search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    பயனாளிகளுக்கு சிவப்பு ரேசன் அட்டை-அமைச்சர் நமச்சிவாயம் வழங்கினார்
    X

    பயனாளிக்கு உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் சிவப்பு ரேசன் அட்டை வழங்கிய காட்சி.

    பயனாளிகளுக்கு சிவப்பு ரேசன் அட்டை-அமைச்சர் நமச்சிவாயம் வழங்கினார்

    • மண்ணாடிப்பட்டு தொகுதிக்குட்பட்ட பயனாளிகளுக்கு சிகப்பு நிற ரேஷன் கார்டு வழங்கும் விழா திருக்கனூரில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
    • நிவாரண நிதியிலிருந்து மருத்துவ உதவிக்காக தலா ரூ.20ஆயிரம் வழங்கினார்.

    புதுச்சேரி:

    மண்ணாடிப்பட்டு தொகுதிக்குட்பட்ட பயனாளிகளுக்கு சிகப்பு நிற ரேஷன் கார்டு வழங்கும் விழா திருக்கனூரில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

    விழாவிற்கு தொகுதி எம்.எல்.ஏ.வும், உள்துறை அமைச்சருமான நமச்சி வாயம் தலைமை தாங்கி 90 பேருக்கு சிவப்பு நிற ரேஷன் கார்டு மற்றும் புதிதாக பிரிக்கப்பட்ட ரேஷன் அட்டைகளை வழங்கினார்.

    அதனை தொடர்ந்து முதல்-அமைச்சர் நிவாரண நிதியிலிருந்து மருத்துவ உதவிக்காக தலா ரூ.20ஆயிரம் வீதம் 10 பேருக்கு மொத்தம் ரூபாய் 2 லட்சம் உதவி தொகை வழங்கினார்.

    இதில் முன்னாள் எம்.எல்.ஏ அருள்முருகன், பா.ஜனதா மாநில செயற்குழு உறுப்பினர் செல்வகுமார், காட்டேரிக்குப்பம் போட்டோ ராஜா உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×