என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
போதை பழக்கத்தை ஒழிக்க மாணவர்களிடம் விழிப்புணர்வு-ரங்கசாமி வலியுறுத்தல்
- மத்திய சுகாதார அமைச் சகம் அறிவுறுத்தலின் பேரில், தன்னார்வ ரத்த தான முகாம் கடந்த 17-ந் தேதி முதல் வருகிற 1-ந் தேதி வரை இந்தியா வில் உள்ள அனைத்து அங்கீகரிக்கப்பட்ட ரத்த வங்கி களில் நடக்கிறது.
- கல்லுாரி மாணவர்கள், இளைஞர்களுக்கு தன்னார்வ ரத்த தானம் செய்யும் விழிப் புணர்வு ஏற்படுத்துவது தொடர்பான கருத்தரங்கம், புதுவை அண்ணாமலை ஓட்டலில் நடந்தது.
புதுச்சேரி:
மத்திய சுகாதார அமைச் சகம் அறிவுறுத்தலின் பேரில், தன்னார்வ ரத்த தான முகாம் கடந்த 17-ந் தேதி முதல் வருகிற 1-ந் தேதி வரை இந்தியாவில் உள்ள அனைத்து அங்கீகரிக்கப்பட்ட ரத்த வங்கிகளில் நடக்கிறது.
அதனையொட்டி, புதுவை மாநிலத்தில் உள்ள 4 அரசு, 11 தனியார் மருத்துவ மனைகளில் ரத்ததான முகாம் நடைபெற்று வருகிறது. சுகாதார துறை, ரத்த மாற்று கழகம், எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் இணைந்து தன்னார்வ ரத்ததானத்தை ஊக்குவிக்கும் வகையில் பல விழிப் புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.
இதையொட்டி, கல்லுாரி மாணவர்கள், இளைஞர் களுக்கு தன்னார்வ ரத்த தானம் செய்யும் விழிப் புணர்வு ஏற்படுத்துவது தொடர்பான கருத்தரங்கம், புதுவை அண்ணாமலை ஓட்டலில் நடந்தது.
சுகாதார துறை செயலாளர் உதயகுமார் வாழ்த்துரை வழங்கினார். இயக்குனர் ஸ்ரீராமுலு வரவேற்றார். கருத்தரங்கை தொடங்கி வைத்து முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசுகையில், புதுவை அரசு, சுகாதாரத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக் கிறது. சுகாதார வசதியை மேலும் மேம்படுத்துவதே அரசின் எண்ணமாகும்.
தன்னார்வ ரத்ததானம் பற்றிய விழிப்புணர்வு இளைஞர்களுக்கு ஏற்படுத்துவது போல், பயிலும் மாணவர்களிடையே போதை பழக்கம் இல்லாமல் ஒழிக்கவும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார்.
தொடர்ந்து கருத்தரங்கை யொட்டி நடந்த போட்டியில் முதல் 3 இடங்களை பிடித்த மணக்குள விநாயகர் செவிலியர் கல்லுரி, மதர் தெரேசா பட்ட மேற்படிப்பு மைய செவிலியர் பள்ளி, ஈஸ்ட் கோஸ்ட் செவிலியர் கல்லுாரிகளுக்கு ரொக்கப்ப–ரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்