search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுவை இளைஞர் காங்கிரசார் ரத்ததானம்
    X

    ரத்ததான முகாமை மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி ஆகியோர் தொடங்கி வைத்து பார்வையிட்ட காட்சி.

    புதுவை இளைஞர் காங்கிரசார் ரத்ததானம்

    • காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் வைத்தியநாதன், ஒருங்கிணைப்பாளர் தேவதாஸ் ஆகியோர் முகாமை தொடங்கி வைத்தனர்.
    • இளைஞர்கள் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முகாமில் 100-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்று ரத்ததானம் செய்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில இளைஞர் காங்கிரஸ் சார்பில் இந்திரா காந்தி நினைவுதினத்தை முன்னிட்டு பல்வேறு இடங்களில் ரத்த தானம் முகாம் நடந்தது.

    புதுவை அரசு ஆஸ்பத்திரியில் நடந்த ரத்ததான முகாமுக்கு இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர் ஆனந்த்பாபு நடராஜன் தலைமை தாங்கினார்.

    புதுவை மாநில பொறுப்பாளர் ஜோஸ்வா ஜெராட், முன்னிலை வகித்தார்.

    முகாமை மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் வைத்தியநாதன், ஒருங்கிணைப்பாளர் தேவதாஸ் ஆகியோர் முகாமை தொடங்கி வைத்தனர்.

    வக்கீல் பிரிவு தலைவர் மருதுபாண்டியன், மாநில பொதுச்செயலாளர்கள் திருமுருகன், சந்திரிகா, இலக்கிய அணி தலைவர் கோவிந்தராஜ், வட்டார காங்கிரஸ் தலைவர்கள் ஆறுமுகம், சுந்தர், அயலக பிரிவு தலைவர் பரந்தாமன்,

    இளைஞர் காங்கிரஸ் ஊடகப்பிரிவு தலைவர் தமிழரசன்,மாநில பொதுச் செயலாளர், சத்ய நாராயணன், செயலா ளர்கள், வினோத், சித்தானந்தம், உதயா, மனோஜ், அத்வானி, மாவட்ட தலைவர்கள், பிரகாஷ், அய்யப்பன், கார்த்திகேயன், அஷ்ரப் அலி, தொகுதி தலைவர்கள், ராஜேஷ், சுரேஷ் ராஜ், சரத் பாபு, கண்ணன், வீர மணிகண்டன், ஊடகத்துறை ஒருங்கிணைப்பாளர்கள் கென்னடி, ஜனா,மற்றும் இளைஞர்கள் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முகாமில் 100-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்று ரத்ததானம் செய்தனர்.

    Next Story
    ×