என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    சுற்றுலா பயணிகளால் திணறிய புதுவை
    X

    புதுவையில் குவிந்துள்ள சுற்றுலா பயணிகள்.

    சுற்றுலா பயணிகளால் திணறிய புதுவை

    • சுதந்திர தின தொடர் விடுமுறையையொட்டி புதுவையில் சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர்.
    • புதுவை கடற்கரை சாலையில் நாளை சுதந்திர தினவிழா கொண்டாடப்படுகிறது.

    புதுச்சேரி:

    சுதந்திர தின தொடர் விடுமுறையையொட்டி புதுவையில் சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர்.

    புதுவை கடற்கரை சாலையில் நாளை சுதந்திர தினவிழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி விழா மேடை அமைக்க ப்பட்டுள்ளது.போலீசார் பாதுகாப்பும் போடப்ப ட்டுள்ளது. இதையும் தாண்டி சுற்றுலா பயணிகள் கடற்கரையில் குவிந்திருந்தனர். கடற்கரையில் மணலில் இறங்கி அலையில் கால் நனைத்து விளையாடினர். சிலர் குளித்து விளை யாடினர். நகர பகுதியில் பாரதி பூங்கா, தாவரவியல் பூங்கா, சுண்ணாம்பாறு படகு குழாம் சுற்றுலா பயணிகளால் நிரம்பி வழிந்தது.

    நகரின் பல சாலைகளில் கூட்டம், கூட்ட மாக சுற்றுலா பயணிகள் குடும்பத்தோடு சுற்றினர். உணவு விடுதிகளிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் அதிகரிப்பால் பல சாலைகளில் ஊர்வல மாக வாகனங்கள் அணி வகுத்து சென்றது.

    ஒட்டு மொத்தமாக புதுவை நகர பகுதி சுற்றுலா பயணிகளால் திணறியது.

    Next Story
    ×