search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    மதகடிப்பட்டில்  பொதுமக்கள் போராட்டம்
    X

    பொக்லைன் எந்திரம் முன் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காட்சி.

    மதகடிப்பட்டில் பொதுமக்கள் போராட்டம்

    விழுப்புரம் -நாகப்பட்டினம் 4 வழி சாலை பணி நடைபெற்று வருகிறது. இதற்காக தமிழக பகுதியான ஆழியூர் ஏரி பகுதியிலிருந்து மண் எடுத்து வர திருவாண்டார் கோவில் காலணி பகுதியில் வழி சீர்படுத்தும் பணியில் தனியார் கட்டுமான நிறுவனத்தினர் ஈடுபட்டனர்.

    புதுச்சேரி:

    விழுப்புரம் -நாகப்பட்டினம் 4 வழி சாலை பணி நடைபெற்று வருகிறது.

    இதற்காக தமிழக பகுதியான ஆழியூர் ஏரி பகுதியிலிருந்து மண் எடுத்து வர திருவாண்டார் கோவில் காலணி பகுதியில் வழி சீர்படுத்தும் பணியில் தனியார் கட்டுமான நிறுவனத்தினர் ஈடுபட்டனர். இத் தகவல் அறிந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஒன்று கூடி பொக்லைன் எந்திரம் முன் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடு பட்டனர். அப்போது அப்பகுதி மக்கள் இவ்வழியாக மண் லாரி சென்றால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் அதுமட்டுமில்லாமல் 500-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் படிக்கும் தனியார் பள்ளியும் பகுதியில் அமைந்துள்ளது.

    ஏற்கனவே இந்திய உணவு கழகத்திற்கு உணவு ஏற்ற வரும் லாரிகளால் இடையூறு இருந்து வருகிறது. அதனுடன் சேர்த்து இவ் வழியாக லாரியில் மண் எடுத்து சென்றால் மேலும் மக்களுக்கு பாதிப்பு ஏற்படும். பாதுகாப்புக்கு அச்சுறுதலாக இருக்கும் எனவே இவ்வழியில் எடுத்துச் செல்லக்கூடாது என வலியுறுத்தினர்.

    அப்பகுதி பொதுமக்களிடம் திருபுவனை போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். பொக்லைன் எந்திரத்தின் முன்பு அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.

    Next Story
    ×