search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    ஆசிரியர் தினத்தில் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம்
    X

    கோப்பு படம்.

    ஆசிரியர் தினத்தில் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம்

    • காரைக்கால் தொடக்க பள்ளி ஆசிரியர்கள் முடிவு
    • ஆசிரியர் தினத்தன்று கருப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்றுவது என முடிவு எடுத்துள்ளோம்.

    புதுச்சேரி:

    புதுவை யூனியன் பிரதேச ஆசிரியர் காரைக்கால் சங்க தலைவர் ஸ்ரீராம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியி ருப்பதாவது:-

    தொடக்கப்பள்ளி ஆசிரியர்களின் பணியிட மாறுதல் கலந்தாய்வின் போது காரைக்கால் பகுதியை ஏ.பி. என பிரிக்காமல் ஒரே பகுதியாக கொண்டு கலந்தாய்வு நடத்த வேண்டும். தொடக்கப்பள்ளி ஆசிரியர்களின் கலந்தாய்வின்போது காரைக்கால் பகுதியில் பணி மூப்பு அடிப்படையில் பணியிட மாறுதல் கலந்தாய்வை நடத்த வேண்டும்.

    கருப்பு பேட்ஜ் அணிந்து...

    காரைக்கால் பகுதி தொடக்கப் பள்ளிகளில் வகுப்புக்கு ஓர் ஆசிரியர் வீதம் நியமனம் செய்ய வேண்டும்.பணி நிரவல் என்ற பெயரில் காரைக்கால் பகுதியில் உள்ள தொடக்கப்பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்களை குறைக்க கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பலகட்ட நிலையில் கோரிக்கை கடிதம், போராட்டங்கள் நடத்தியும் கல்வித்துறை செவிசாய்க்க வில்லை.

    எனவே ஆசிரியர் தினத்தன்று கருப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்றுவது என முடிவு எடுத்துள்ளோம்.

    அதேபோல் பணியிட மாறுதல் கலந்தாய்வு நடைபெறும் நாள் அன்று தொடக்கப்பள்ளி ஆசிரியர் அனைவரும் ஒட்டுமொத்த விடுப்பு எடுத்து கலந் தாய்வை புறக் கணித்தும், காரைக்கால் ஆசிரியர் கூட்டமைப்புடன் இணைந்து காரைக்கால் முதன்மை கல்வி அதிகாரி அலுவ லகத்தை முற்றுகை யிடவும் முடிவு எடுத்துள்ளோம்.

    இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×