என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளை கண்டித்து போராட்டம்
    X

    பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்ட காட்சி.

    தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளை கண்டித்து போராட்டம்

    • சென்னை- நாகப்பட்டி–னம் 4 வழி சாலை அமைக்கும் பணிக்காக சாலையின் இரு புறமும் இருந்த ஆயிரக்கணக்கான வீடுகள், கடைகள், வணிக நிறுவனங்கள், அகற்றப்பட்டன.
    • இதனை கண்டித்து, அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் காலை திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    புதுச்சேரி:

    சென்னை- நாகப்பட்டி–னம் 4 வழி சாலை அமைக்கும் பணிக்காக சாலையின் இரு புறமும் இருந்த ஆயிரக்கணக்கான வீடுகள், கடைகள், வணிக நிறுவனங்கள், அகற்றப்பட்டன.அதனைத் தொடர்ந்து 4 வழி சாலைக்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், பங்கூர் பகுதியில் 4 வழி சாலைக்காக பொதுமக்கள் வசிக்கும் இடத்தை தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அகற்றினர்.

    இதனை கண்டித்து, அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் காலை திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    முறையான வழித்தடங்கள் இல்லாமல் சாலை அமைப்பது, கழிவு நீர் வாய்க்கால் அமைக்காமல் சாலையை அமைக்க முயல்வது, குடிநீர் இணைப்புகளை துண்டிப்பது, மின்சாரம் மற்றும் தொலைதொடர்பு வயர்களை துண்டிப்பது, சாலையில் செல்ல முடியாத அளவில் சேரும் சகதியுமான சாலைகளை அமைக்க கூடாது. என வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.

    Next Story
    ×