search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    ஒதியஞ்சாலை-முதலியார் பேட்டை போலீஸ் அதிகாரிகளை மாற்ற வேண்டும்
    X

     உப்பளம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி புதுவை போலீஸ் டி.ஜிபி., ஸ்ரீனிவாசை சந்தித்து புகார் மனு அளித்த காட்சி.

    ஒதியஞ்சாலை-முதலியார் பேட்டை போலீஸ் அதிகாரிகளை மாற்ற வேண்டும்

    • கென்னடி எம்.எல்.ஏ. டி.ஜி.பி.யிடம் வலியுறுத்தல்
    • சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிவிட்டன. அனைத்து இடங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்.

    புதுச்சேரி:

    உப்பளம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி புதுவை போலீஸ் டி.ஜிபி., ஸ்ரீனிவாசை சந்தித்து புகார் மனு அளித்தார்.

    அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    புதுச்சேரி நகரப் பகு தியில் கஞ்சா, போதை மாத்திரை, ஊசி போன்றவை எளிதாக கிடைக்கின்றன.

    இது மிகவும் கவலைக்குரியது. இளைஞர்கள் பொது இடங்களில் வெளிப்படையாக போதைப்பொருள் உட் கொள்கிறார்கள்.

    போலீஸ் நிலையத்தில் லஞ்ச, லாவண்யம் அதிகமாகிவிட்டது. உப்பளம் தொகுதியில் கல்லறை சுடுகாடு, சன்னியாசி தோப்பு, ஆகிய ஆகிய இடங்கள் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிவிட்டன. அனைத்து இடங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்.

    ஒதியஞ்சாலை, முதலியார்பேட்டை போலீஸ் நிலைய அதிகாரிகளை மாற்ற வேண்டும். இல் ையென்றால் மக்களை திரட்டி போராட்டம் நடத் தப்படும்.

    இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

    மனுவைப் பெற்றுக் கொண்ட டி.ஜி.பி., ஸ்ரீனி வாஸ், இது குறித்து 15 நாட் களுக்குள் நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார்.

    Next Story
    ×