என் மலர்
புதுச்சேரி

பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு பேரணியை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் கொடி அசைத்து தொடங்கி வைத்த காட்சி.
பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு பேரணி
- இப்பேரணியை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
- பொதுமக்களிடையே ஏற்படுத்தும் வகையில் பிளாஸ்டிக் பைகளை தவிர்ப்போம்
புதுச்சேரி:
புதுவை அரசு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து சார்பில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை தவிர்ப்போம் சுற்றுச்சூழலை காப்போம் என்பதை வலியுறுத்தி பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்ட பேரணி தவளக்குப்பத்தில் நடந்தது.
அரவிந்தர் கண் மருத்துவமனையில் இருந்து தொடங்கிய இப்பேரணியை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
மேலும் பிளாஸ்டிக் குறித்து விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தும் வகையில் பிளாஸ்டிக் பைகளை தவிர்ப்போம் என்பதை வலியுறுத்தி துணிப்பைகளை பொது மக்களுக்கு சபாநாயகர் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் மாசு கட்டுப்பாட்டு வாரிய செயற்பொறியாளர் ரமேஷ், அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ் மற்றும் அப்பகுதி முக்கிய பிரமுகர்கள் ராமு, தட்சிணாமூர்த்தி ,லட்சுமிகாந்தன், மணி, தண்டபாணி, ரவி, விஜி, செல்வி, விமலா ,உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.






