என் மலர்
புதுச்சேரி

பழைய பொருட்களை தீயிட்டு எரித்த காட்சி.
புதுவையில் போகி பண்டிகை கொண்டாட்டம்
- தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் போகிப்பண்டிகையுடன் தொடங்கியது. அனைத்துத் தரப்பின ராலும் ஆனந்தத்தோடு கொண்டா டப்படுவது பொங்கல் திருநாள். தொடர்ச்சியாக நான்கு நாட்கள், நகரம் முதல் கிராமங்கள்தோறும் கொண்டாடப்படுகின்றது.
- பண்டிகை யினையொட்டி சுற்றுச்சூழல் பாதிக்காதவாறு பிளாஸ்டிக் பொருட்கள், டயர்கள் உள்ளிட்டவைகளை எரிக்காமல் பெரும்பாலான மக்கள் விழிப்புணர்வுடன் கொண்டாடினர்.
புதுச்சேரி:
தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் போகிப்பண்டிகையுடன் தொடங்கியது.
அனைத்துத் தரப்பின ராலும் ஆனந்தத்தோடு கொண்டா டப்படுவது பொங்கல் திருநாள். தொடர்ச்சியாக நான்கு நாட்கள், நகரம் முதல் கிராமங்கள்தோறும் கொண்டாடப்படுகின்றது. கிராமங்களில் இந்தப் பண்டிகையில் கொண்டாட்டங்கள் அதிக களை கட்டும். பண்டிகையின் முதல் நாளான போகி பண்டிகையையொட்டி புதுவையில் உள்ள அனைத்து பகுதிகளிலும் கடும் குளிரில் முதல் வீட்டில் உள்ள பழைய பொருட்களை எடுத்து வந்து வீட்டின் வாசல் முன்பு தீயிட்டு எரித்தார்கள், பழையன கழிதலும், புதியன புகுதலும்' என்ற வகையில் போகிப் பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.
பண்டிகை யினையொட்டி சுற்றுச்சூழல் பாதிக்காதவாறு பிளாஸ்டிக் பொருட்கள், டயர்கள் உள்ளிட்டவைகளை எரிக்காமல் பெரும்பாலான மக்கள் விழிப்புணர்வுடன் கொண்டாடினர்.






