search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    அறிவிக்கப்படாத மின்வெட்டால் பொதுமக்கள் அவதி
    X

    கோப்பு படம்.

    அறிவிக்கப்படாத மின்வெட்டால் பொதுமக்கள் அவதி

    • ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள்.
    • மின்சார தடையால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அவதியடைந்தனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி - விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் திருபுவனை அமைந்துள்ளது. இப்பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள்.

    மேலும் ஏராளமான தனியார் தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. இந்த நிலையில் நேற்று இரவு சுமார் 8 மணி முதல் திடீரென மின்சாரம் தடைபட்டது. வெகு நேரம் ஆகியும் மின் இணைப்பு வழங்க வில்லை. இது குறித்து மின்துறை அதிகாரிகளுக்கு அப்பகுதி முக்கிய பிரமுகர்கள் தொடர்பு கொண்ட போது எவ்வித பதிலும் அளிக்க வில்லை.

    இன்று அதிகாலை 4 மணி வரை மின்சாரம் வழங்கப்பட வில்லை. இந்த அறிவிக்கப்பட்டாத மின்சார தடையால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அவதியடைந்தனர். குறிப்பாக குழந்தைகள் மற்றும் வயது முதிர்ந்த முதியோர்களும் அவதிக்குள்ளாகினர்.

    Next Story
    ×